News November 18, 2025
சேலம் அருகே பயங்கரம்; தந்தையை கொலை செய்த மகன்!

சேலம்: ஓமலூர் பல்பாக்கி கிராமத்தில் தூத்துக்குடியை சேர்ந்த பால்சாமி (63) என்பவர் தீக்குச்சி கம்பெனியில் தங்கி பணியாற்றி வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இவரது மகன் மனோகரன் (30) மது போதையில் தகாறு செய்து இரும்பு சம்மட்டியால் பால்சாமியை தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.ஓமலூர் போலீசார் மனோகரன் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News November 18, 2025
சேலம்: மின்தடை அறிவிப்பு – நாளை ரெடியா இருங்க!

எட்டிகுட்டைமேடு துணை மின்நிலையம், ஜலகண்டாபுரம் துணை மின்நிலையம், மல்லூர் துணை மின்நிலையம், வேம்படிதளம் துணை மின்நிலையம், தாரமங்கலம் துணை மின்நிலையங்களில் நாளை மாதந்திர மின் பராமப்ரிப்பு பணி நடைபெறுகிறது. இதன் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் பகுதி மக்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News November 18, 2025
சேலம்: மின்தடை அறிவிப்பு – நாளை ரெடியா இருங்க!

எட்டிகுட்டைமேடு துணை மின்நிலையம், ஜலகண்டாபுரம் துணை மின்நிலையம், மல்லூர் துணை மின்நிலையம், வேம்படிதளம் துணை மின்நிலையம், தாரமங்கலம் துணை மின்நிலையங்களில் நாளை மாதந்திர மின் பராமப்ரிப்பு பணி நடைபெறுகிறது. இதன் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் பகுதி மக்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News November 18, 2025
கார்த்திகை மாத அமாவாசை மாதேஸ்வரன் மலைக்கு சிறப்பு பஸ்

சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில், கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு நாளை (புதன்கிழமை) கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சேலம், மேச்சேரி மற்றும் தர்மபுரியில் இருந்து இந்த சிறப்பு பேருந்துகள் செல்கின்றன. மேலும், சேலத்தில் இருந்து பவானி கூடுதுறை மற்றும் சித்தர்கோவிலுக்கும் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


