News November 18, 2025

வாக்குப்பதிவு தொடங்கும் முன்னே 25,000 வாக்குகள்: RJD

image

பிஹார் தேர்தலின் முடிவு கள நிலவரத்துக்கு ஏற்றார் போல இல்லை என RJD-ன் செய்தி தொடர்பாளர் சக்தி சிங் தெரிவித்துள்ளார். மேலும் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே ஒவ்வொரு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்திலும் 25,000 வாக்குகள் இருந்ததாக அவர் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
இதையும் மீறி தாங்கள் 25 இடங்களை வெல்ல முடிந்ததாகவும், NDA கூட்டணி அரசியலமைப்பை ஏமாற்றுகிறது என்றும் அவர் சாடியுள்ளார்.

Similar News

News November 18, 2025

BREAKING: மேலும் ஒரு மாவட்டத்திற்கு விடுமுறை

image

காரைக்காலை தொடர்ந்து, புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருவதால், மாணவர்களின் பாதுகாப்பு கருதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News November 18, 2025

BREAKING: மேலும் ஒரு மாவட்டத்திற்கு விடுமுறை

image

காரைக்காலை தொடர்ந்து, புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருவதால், மாணவர்களின் பாதுகாப்பு கருதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News November 18, 2025

10 ஆண்டுகளுக்கு பின் பிஹாரிகள் வரமாட்டார்கள்: ACS

image

பிஹாரில் மத்திய அரசு பல கோடி ரூபாய் மதிப்பில், பல திட்டங்களை கொண்டு வந்து, அம்மாநிலத்தை வளமாக்கி வருவதாக புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார். 10 ஆண்டுகளில் பிஹாரைச் சேர்ந்த ஒருவர் கூட தமிழகத்திற்கு வரமாட்டார்கள். அப்போது இங்குள்ளவர்கள் தான் வேலை செய்தாக வேண்டும், தமிழகத்தில் வழங்கப்படும் இலவச திட்டங்களால், வேலை செய்ய ஆள்கள் பற்றாக்குறை ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!