News April 24, 2024
தமிழ்நாட்டிற்குள் இனி பணம் கொண்டு செல்லலாம்

தமிழ்நாட்டில் உள் மாவட்டங்களில், பறக்கும் படை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி சாகு தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டிற்குள் ரூ.50,000க்கும் மேல் கொண்டு செல்வதற்கு எந்த தடையும் இல்லை. ஆனால், அண்டை மாநில எல்லை மாவட்டங்களில் பறக்கும் படையினர் சோதனை தொடரும் எனக் கூறிய அவர், வாக்காளர் பெயர் விடுபட்டது தொடர்பாக ஒவ்வொன்றாக விசாரணை நடத்தப்படும் என விளக்கமளித்தார்.
Similar News
News January 14, 2026
தெருநாய்களை கொல்வதாக தேர்தல் வாக்குறுதி!

தெலங்கானாவில் சமீபத்தில் கிராம பஞ்சாயத்துக்கான உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அப்போது, பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் தெருநாய்களை கொல்வோம் என பல வேட்பாளர்கள் தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தனர். தற்போது வெற்றி பெற்றதும், தெருநாய்களை பஞ்சாயத்து தலைவர்கள் தேடி தேடி கொன்று வருகின்றனர். அந்த வகையில், கடந்த ஒருவாரத்தில் மட்டும் 500 தெருநாய்கள் கொல்லப்பட்டதாக கூறி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
News January 14, 2026
இந்திய விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் டிரம்ப்

ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25% கூடுதல் வரிவிதிக்கப்படும் என <<18842996>>டிரம்ப்<<>> அறிவித்துள்ளார். இதனால் இந்திய விவசாயிகள், அரசி ஏற்றுமதியாளர்கள் கடுமையான பாதிக்கப்படுவார்கள் என அஞ்சப்படுகிறது. ஈரான் அதன் மொத்த அரசி தேவையில், மூன்றில் இரண்டு பங்கை இந்தியாவிடம் வாங்குகிறது. ஏற்கனவே கடந்த 2 மாதங்களில் அனுப்பப்பட்ட அரிசிக்கான பணம் இன்னும் வந்து சேரவில்லை என ஏற்றுமதியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
News January 14, 2026
ஜனவரி 14: வரலாற்றில் இன்று

*போகி பண்டிகை. *1761 – 3-ம் பானிபட் போர் ஆப்கானியர்களுக்கும் மராட்டியர்களுக்கும் இடையில் நடைபெற்றது. இதில் ஆப்கானியர்களின் வெற்றி இந்திய வரலாற்றில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. *1974 – திருச்சி, தஞ்சை மாவட்டங்களிலிருந்து பிரித்து புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டது. *1951 – ஓ. பன்னீர்செல்வம் பிறந்தநாள்.


