News April 24, 2024
BREAKING: தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ விளக்கம்

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளைக் கணக்கிடுவதில் மாறுபாடு நிகழ்ந்தது ஏன்? என்று தேர்தல் அதிகாரி சாகு முதல்முறையாக விளக்கமளித்துள்ளார். செயலியில் கிடைத்த தகவல் அடிப்படையில் வாக்குப்பதிவு சதவீதம் கணக்கிட்டதால் தவறு ஏற்பட்டது. தேர்தல் நடத்தும் அதிகாரி கையெழுத்து போட்டு கொடுப்பதில் தாமதம் ஏற்படும் என்பதால், செயலியில் கிடைத்த தகவலை அறிவித்ததாக விளக்கமளித்துள்ளார்.
Similar News
News November 12, 2025
BREAKING: தமிழக அரசு அறிவிப்பு

மழைக்காலங்களில் கூடுதல் மின்வாரிய பணியாளர்களை பணியில் அமர்த்த அரசு உத்தரவிட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் முன் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும், அதிக பாதிப்பு ஏற்படும் வட்டங்களில் ஒரு பிரிவுக்கு 4 பேரை பணியமர்த்தவும் ஆணையிடப்பட்டுள்ளது. மேலும், தற்செயல் விடுப்பில் உள்ள பணியாளர்கள் விடுப்பை ரத்து செய்துவிட்டு பணிக்கு திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News November 12, 2025
நீங்களும் இப்படி ஏமாறலாம்.. உஷார் மக்களே!

டெக்னாலஜி வளர, வளர மோசடிகளும் அதிகரித்து கொண்டே போகின்றன. இது புது ரகம். உங்கள் நண்பரின் நண்பர் என ஒருவர் போன் செய்து பேசுவார். அப்போது 2nd call வரும். அது உங்கள் நண்பரின் அழைப்புதான், Attend செய்து, Call Merge செய்ய சொல்கின்றனர். அதை செய்தால், உங்கள் போனின் மொத்த கட்டுப்பாடும் அவர்களிடம் சென்று விடுகிறது. ஈசியாக, வங்கியின் OTP அழைப்பை, தெரிந்து கொண்டு மொத்த பணத்தையும் சுருட்டி விடுகின்றனர்.
News November 12, 2025
பிஹார் தேர்தல்: புதிய கருத்துக்கணிப்பு

நடந்து முடிந்த பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் NDA கூட்டணி 121 – 141 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக Axis My India கணித்துள்ளது. மேலும், மகாகட்பந்தன் கூட்டணி 98 – 118 இடங்களிலும், மற்றவை 0 – 5 இடங்களிலும் வெல்ல வாய்ப்பு உள்ளதாம். நேற்று வெளியிடப்பட்ட பெரும்பாலான நிறுவனங்களின் கருத்துக் கணிப்புகளிலும் NDA கூட்டணிக்கே வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


