News November 17, 2025
85,000 புள்ளிகளை நெருங்கிய சென்செக்ஸ்

வாரத்தின் முதல் நாளான இன்று, இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. 388 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ், 84,950.95 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதேபோல 103.40 புள்ளிகள் உயர்ந்த நிப்டி 26,013.45 புள்ளிகளில் நிறைவு செய்தது. குறிப்பாக ஆட்டோ, எனர்ஜி, மீடியா துறைகள் ஏற்றம் கண்டன. முதல் நாளே பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Similar News
News November 17, 2025
SC பிரிவிலும் கிரீமிலேயர் வேண்டும்: CJI பிஆர் கவாய்

OBC-யில் உள்ளதை போல, பட்டியல் சாதியினர்(SC) இட ஒதுக்கீட்டிலும் கிரீமிலேயர் முறையை (வருவாய் உச்சவரம்பு), வரவேற்பதாக CJI பி.ஆர்.கவாய் தெரிவித்தார். ஆந்திராவில் நடந்த ‘இந்தியா & உயிர்ப்புள்ள அரசியலமைப்பின் 75 ஆண்டுகள்’ நிகழ்ச்சியில் பேசிய அவர், ஒரே சமூகமாக இருந்தாலும், IAS ஆபீசரின் பிள்ளையையும், ஏழை விவசாய தொழிலாளியின் பிள்ளையையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்க முடியாது என்றார்.
News November 17, 2025
SC பிரிவிலும் கிரீமிலேயர் வேண்டும்: CJI பிஆர் கவாய்

OBC-யில் உள்ளதை போல, பட்டியல் சாதியினர்(SC) இட ஒதுக்கீட்டிலும் கிரீமிலேயர் முறையை (வருவாய் உச்சவரம்பு), வரவேற்பதாக CJI பி.ஆர்.கவாய் தெரிவித்தார். ஆந்திராவில் நடந்த ‘இந்தியா & உயிர்ப்புள்ள அரசியலமைப்பின் 75 ஆண்டுகள்’ நிகழ்ச்சியில் பேசிய அவர், ஒரே சமூகமாக இருந்தாலும், IAS ஆபீசரின் பிள்ளையையும், ஏழை விவசாய தொழிலாளியின் பிள்ளையையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்க முடியாது என்றார்.
News November 17, 2025
நாளை பள்ளிகள் விடுமுறை.. முதல் மாவட்டமாக அறிவிப்பு

கனமழை காரணமாக, காரைக்கால் மாவட்டத்தில் நாளை(நவ.18) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்று காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கும், நாகையில் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருவதால், அங்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது. இதுகுறித்து விரைவில் அறிவிக்கப்படலாம்.


