News April 24, 2024
மோடி மீது தேர்தல் ஆணையம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

பெண்களின் தாலி உள்ளிட்ட சொத்துகளை முஸ்லிம்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் காங்கிரஸ் அளித்துவிடும் எனப் பேசியதற்கு மோடி மீது ஏன் EC நடவடிக்கை எடுக்கவில்லை என்று கபில்சிபல் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்துப் பேசிய அவர், மோடியின் பேச்சைச் சுட்டிக்காட்டி, நாட்டில் அரசியல் இந்த அளவுக்கு தரம் தாழ்ந்ததில்லை என்றார். மோடியிடம் விளக்கம் கேட்டுத் EC நோட்டீஸ் அனுப்பவும் அவர் வலியுறுத்தினார்.
Similar News
News January 22, 2026
ஜெயலலிதா வருமான வரி வழக்கில் அதிரடி உத்தரவு!

ஜெயலலிதாவுக்கு எதிரான வருமான வரி வழக்கில், வரி வசூலிக்கும் நடவடிக்கையை நிறுத்துமாறு சென்னை HC உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசான ஜெ.தீபா & தீபக் ஆகியோருக்கு, அவர் செலுத்த வேண்டிய ₹36 கோடி வரியை வசூலிக்கும் வகையில் IT நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து ஜெ.தீபா தொடர்ந்த வழக்கில், வரி பாக்கி குறித்து 2 வாரங்களில் பதில்மனு தாக்கல் செய்யும்வரை, வரி வசூலை நிறுத்தி வைக்க உத்தரவிட்டார்.
News January 22, 2026
திமுகவில் கூண்டோடு இணைகின்றனர்.. OPS அதிர்ச்சி

CM ஸ்டாலின் தலைமையில் வைத்திலிங்கம் முன்னிலையில், தானும் திமுகவில் இணையவுள்ளதாக அதிமுக Ex MLA குன்னம் ராமச்சந்திரன் அறிவித்துள்ளார். ஜன.26-ல் தஞ்சையில் நடைபெறும் விழாவில் தன்னுடன் 250 பேர் திமுகவில் சேரவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ், வைத்திலிங்கம், தற்போது ராமச்சந்திரன் என அடுத்தடுத்து OPS-ன் ஆதரவாளர்கள் இணைவது பேசுபொருளாகியுள்ளது.
News January 22, 2026
அடுத்த 25 வருடங்களுக்கான தேர்தல் அறிக்கை ரெடி: தவெக

திமுக, அதிமுக போலவே தவெகவும் தேர்தல் அறிக்கையை தயார் செய்வதில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் பணம், இலவச பொருள்கள், லேப்டாப் என மற்ற கட்சிகள் கொடுப்பது தேர்தலுக்காகவே என மக்களுக்கு தெரியும் என்றும், தவெக நிறைவேற்றக்கூடிய வாக்குறுதிகளை மட்டுமே வழங்கும் எனவும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். அடுத்த 25 வருடங்களுக்கான தேர்தல் அறிக்கையை விஜய் தருவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


