News April 22, 2024

குமரி: 3,000 அடி உயரத்தில் லட்சார்ச்சனை

image

குமரி மாவட்டம் கடல் மட்டத்திலிருந்து 3,000 அடி உயரத்தில் உள்ள ஆறுகாணி காளிமலை துர்க்கை அம்மன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான லட்சார்ச்சனை நேற்று(ஏப்.21) நடைபெற்றது. இந்து கோயில் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற லட்சார்ச்சனையில் ஏராளமான தாய்மார்கள் கலந்து கொண்டு லலிதா சகஸ்ரநாமம் சொல்லி குங்குமத்தால் லட்சார்ச்சனை செய்தனர்.

Similar News

News November 4, 2025

குமரி: ரூ.35,400 ஊதியத்தில் ரயில்வே வேலை

image

இந்திய ரயில்வே துறையில் சூப்பர்வைசர், ஸ்டேஷன் மாஸ்டர், கிளார்க் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 5,810 காலியிடங்கள் (தமிழ்நாடு -213) அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி முடித்த 18 வயது நிரம்பியவர்கள் www.rrbchennai.gov.in என்ற தளத்தில் நவ.20 க்குள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக ரூ.25,500 – ரூ.35,400 வரை வழங்கப்படும். இத்தகவலை டிகிரி முடித்தவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

News November 4, 2025

ஆரல்வாய்மொழி: கனிம வளம் கடத்திய லாரி பறிமுதல்

image

ஆரல்வாய்மொழி  போலீசார் ஆரல்வாய்மொழி 4 வழிச்சாலையில் நேற்று (நவ.3) சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஜல்லிக்கற்களை ஏற்றி வந்த  லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் எந்தவித ஆவணங்களும் இன்றி கனிமவளத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து ஜல்லியுடன் லாரியை பறிமுதல் செய்த போலீசார் திற்பரப்பஒ சேர்ந்த டிரைவர் சந்திரன்(54) என்பவரை கைது செய்து லாரி உரிமையாளர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

News November 4, 2025

குமரியில் இலவச கண்புரை சிகிச்சை நடைபெறும் இடங்கள்

image

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் இலவச கண்புரை சிகிச்சை முகாம் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சிகிச்சையின் மூலம் தெளிவான நீடித்த பார்வை கிடைப்பது மற்றும் நோயாளிகள் விரைவில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும். இந்த முகமானது நாளை அகஸ்தீஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து நடைபெற உள்ளது. மேலும் முகாம் பல்வேறு இடங்களில் நடைபெறும் தேதிகள் குறித்த அறிவிப்பும் வெளியாகி உள்ளது.

error: Content is protected !!