News April 22, 2024
அயோத்தி ராமர் கோயிலில் 1.50 கோடி பேர் தரிசனம்

அயோத்தி ராமர் கோயிலில் கடந்த 3 மாதத்தில் 1.50 கோடி பேர் தரிசனம் செய்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அயோத்தி கோயில் ஜனவரி மாதம் 22ஆம் தேதி திறக்கப்பட்டது. அதையடுத்து அங்கு நாடு முழுவதும் இருந்தும் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். நாள்தோறும் கோயிலுக்கு 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வருவதாகவும், இதுவரை 1.50 பேர் தரிசனம் செய்திருப்பதாகவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News January 19, 2026
BREAKING: தமிழகம் முழுவதும் நாளை ஸ்டிரைக் அறிவிப்பு

சத்துணவு ஊழியர்கள் நாளை முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். காலமுறை ஊதியம், பணிக்கொடை உள்ளிட்ட திமுகவின் வாக்குறுதி 313-ஐ நிறைவேற்றக் கோரி இந்த போராட்டம் நடைபெறவுள்ளது. தலைமைச் செயலகத்தில் சமூக நலத்துறை இயக்குநருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது அரசுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும்.
News January 19, 2026
‘கம்பவுண்டர்’ ஏன் அந்த பெயர் தெரியுமா?

‘டாக்டர் ஆகலன்னா என்ன, கம்பவுண்டர் ஆகலாம்’, 90s கிட்ஸ் அதிகம் கேட்ட டயலாக். ஆனால், கம்பவுண்டர் என்பது வெறும் உதவியாளர் பணி அல்ல. அன்று மருந்துகளில் பிணைப்பு ரசாயனங்கள் இல்லாததால், பல்வேறு மூலக்கூறுகளை சரியான விகிதத்தில் கலந்து (Compounding) மருந்துகளை உருவாக்கினர். இதனாலேயே ‘கம்பவுண்டர்’ என்று பெயர். இதற்கான டிப்ளமோ படிப்புகளும் இருந்தன. நவீன மருந்துகளின் வருகையால் இன்று அந்த பணி மறைந்துவிட்டது.
News January 19, 2026
பாமக எனக்கே சொந்தம்: வழக்கு தொடர்ந்தார் ராமதாஸ்

டெல்லி HC வழிகாட்டுதலின் படி, பாமகவுக்கு உரிமை கோரி சென்னை HC-ல், ராமதாஸ் வழக்கு தொடர்ந்துள்ளார். கூட்டணி தொடர்பாக வேறும் யாரும் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது, அப்படி நடத்தினால் அது செல்லாது எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொடி, சின்னமும் தங்களுக்கே சொந்தம் எனக்கூறி ரிட் மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் ஓரிரு நாள்களில் விசாரணைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


