News April 22, 2024
பலத்த பாதுகாப்புடன் மறு வாக்குப்பதிவு

மணிப்பூரில் 11 வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்புடன் மறு வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது. தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளுக்கு ஏப்.19இல் முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. இதில் மணிப்பூரில் 2 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. வாக்குப்பதிவின் போது அங்கு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு வன்முறை நடந்தது. அதனால், இன்று அங்கு மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
Similar News
News November 12, 2025
V-ல் ஆரம்பமாகும் அழகிய நகரங்கள்

இந்தியாவில் பல அழகிய நகரங்கள் உள்ளன. அதில், தனக்கென ஒரு கதை, தனித்துவமான அழகு மற்றும் கலாச்சார வசீகரத்தைக் கொண்டுள்ள சில நகரங்களின் பெயர்கள் ‘V’ என்ற எழுத்தில் தொடங்குகின்றன. அவை என்னென்ன நகரங்கள் என்று, மேலே போட்டோக்களில் கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், உங்களுக்கு மிகவும் பிடித்த நகரம் எது? கமெண்ட்ல சொல்லுங்க.
News November 12, 2025
கவர்னர் மாளிகை தாக்குதல்: 10 ஆண்டுகள் சிறை

கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி கருக்கா வினோத்துக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2023-ம் ஆண்டு கவர்னர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கை விசாரித்து வந்த பூந்தமல்லி NIA கோர்ட், அவருக்கு 10 ஆண்டுகள் சிறை மற்றும் ₹5,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
News November 12, 2025
டெல்லி கார் வெடிப்பு: மேலும் ஒரு டாக்டருக்கு தொடர்பா?

டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் பல டாக்டர்கள் சம்பந்தப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு டாக்டரும் சிக்கியுள்ளார். ஸ்ரீநகரின் SMHS ஹாஸ்பிடலில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்த டாக்டர் நிசார் உல் ஹசன், கடந்த 2023-ல் தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக J&K அரசால் பணி நீக்கம் செய்யப்பட்டார். Al-Falah பல்கலை.,-யில் வேலை பார்த்து வந்த இவர், கார் வெடிப்பு சம்பவத்திற்கு பிறகு மாயமாகியுள்ளார்.


