News April 22, 2024
6 மாவட்டங்களில் மட்டும் பெண்கள் வாக்குப்பதிவு சரிவு

தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக ஆண்களை விட பெண்களின் வாக்குப்பதிவு அதிகரித்தபோதிலும், 6 மாவட்டங்களில் மட்டும் குறைந்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மாவட்டங்களில் ஆண்களை விட பெண்கள் குறைவாகவே வாக்களித்துள்ளனர். இதற்கு கடும் வெயில் மற்றும் கோடை விடுமுறையை கழிக்க முன்கூட்டியே திட்டமிடப்பட்ட பயணமே காரணமாக சொல்லப்படுகிறது.
Similar News
News January 13, 2026
பள்ளிகளுக்கு ஒரு நாள் கூடுதல் விடுமுறை.. அரசு அறிவித்தது

புதுச்சேரியில் உள்ள பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு ஜன.15 – 18 வரை பொங்கல் விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில், போகிப் பண்டிகையை கொண்டாட ஏதுவாக நாளையும் (ஜன.14) விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்கள் & அரசு அலுவலகங்களுக்கு 5 நாள்கள் பொங்கல் விடுமுறையாகும். இதனை ஈடுசெய்யும் விதமாக ஜன.31-ல் அரசு அலுவலகங்கள் செயல்படும்.
News January 13, 2026
கவலை வேண்டாம்: ஓய்வூதியம் பெறுவோருக்கு இலவச சேவை

EPFO ஓய்வூதியம் பெறுபவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தங்களுடைய வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிப்பது கட்டாயம். இந்த சான்றிதழை சமர்ப்பித்தால்தான் ஓய்வூதிய பலன்கள் கிடைக்கும். இதுவரை சான்றிதழை சமர்ப்பிக்கவில்லை என்றால் 033-22029000 என்ற எண்ணுக்கு கால் செய்தால் போதும், அருகிலுள்ள தபால் நிலையத்தில் இருந்து நேரடியாக வீட்டிற்கு வந்து சம்பந்தப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்து, சான்றிதழை சமர்ப்பித்துவிடுவார்கள்.
News January 13, 2026
சற்றுமுன்: இரவில் விஜய்க்கு அதிர்ச்சி

கரூரில் 41 பேர் பலியான வழக்கு தொடர்பாக நேற்று (ஜன.12) டெல்லி CBI அலுவலகத்தில் விஜய் ஆஜரானார். அப்போதும் சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக அவரிடம் CBI அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில், ஜன.19-ல் மீண்டும் ஆஜராக விஜய்க்கு CBI சம்மன் அனுப்பியுள்ளது. பொங்கல் விடுமுறைக்கு பிறகு விஜய் ஆஜராகவுள்ளதால். அதற்கு முன்பு தனது தரப்பு வழக்கறிஞர்களுடன் விஜய் ஆலோசனை நடத்தவுள்ளாராம்.


