News April 22, 2024

அரியலூரில் மது விற்றவர் கைது

image

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் முத்துவாஞ்சேரி பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது மது விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி முத்துவாஞ்சேரியை சேர்ந்த சுப்பிரமணியன் (50) என்பவரது வீட்டில் சோதனை செய்தனர்.அப்பொழுது வீட்டில் பின்புறம் மறைத்து வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Similar News

News April 19, 2025

போக்குவரத்துக் கழகத்தில் வேலை விண்ணப்பிப்பது எப்படி?

image

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் கும்பகோணம் மண்டலத்தில் 756 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் காலிப் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் ஏப்.,21ஆம் தேதிக்குள் <>இங்கு க்ளிக் செய்து<<>>, ஆன்லைனில் விண்ணப்பிக்க என்ற ஆப்சனை தேர்வு செய்ய வேண்டும். அதில் உங்கள் விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க..

News April 19, 2025

குண்டர் தடுப்பு சட்டத்தில் இளைஞர் கைது

image

அரியலூர் மாவட்டம் கீழக்கொளத்தூரைச் சேர்ந்த விக்னேஷ்ராஜ்(26) மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த மாதம் 18ஆம் தேதி  சிற்றுந்து ஓட்டுநரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இவர் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடலாம் என்ற காரணத்தால், கீழப்பழூர் காவல் ஆய்வாளர் பரிந்துரையில், மாவட்ட ஆட்சியர் அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News April 18, 2025

இரவு ரோந்து போலீசாரின் விவரம்

image

அரியலூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் அரியலூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், செந்துறை, திருமானூர், மீன்சுருட்டி, தா.பழூர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவசர உதவிக்கு மாவட்ட காவல் அலுவலகம் வெளியிட்டுள்ள போலீசாரின் கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!