News April 22, 2024
ஈரோடு: 108 ஆம்புலன்சில் பிறந்த பெண் குழந்தை

கோபி அடுத்த டி.என்.பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி பூமணி (29). கர்ப்பிணியான பூமணிக்கு நேற்று இரவு பிரசவ வலி ஏற்பட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் கோபி மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பூமணிக்கு பிரசவ வலி அதிகமானது. எனவே 108 வாகனத்தை சாலை ஓரம் நிறுத்தி மருத்துவ உதவியாளர் பூமணிக்கு பிரசவம் பார்த்தார். இதில் பூமணிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
Similar News
News January 13, 2026
ஈரோட்டில் சவுக்கு சங்கர் மீது புகார்

பகுஜன் சமாஜ் கட்சி ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் பழனி தலைமையிலான கட்சியினர் எஸ்.பி. சுஜாதா-விடம் மனு அளித்தனர். அதில், கருத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி, சவுக்குசங்கர் பணம் சம்பாதித்து வருகிறார். விமர்சனம் என்ற பெயரில் தவறான கருத்துகளை பரப்பி வருகிறார். மேலும், பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவரையும் இழிவுபடுத்தி பேசியுள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
News January 13, 2026
ஈரோடு அருகே தவறி விழுந்தவர் உயிரிழப்பு

ஈரோடு, மாதம்பாளையத்தைச் சேர்ந்தவர் குபேரன். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாகத் தவறி விழுந்துள்ளார். இதில் அவரது தலை மற்றும் கழுத்துப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி குபேரன் பரிதாபமாக உயிரிழந்தார்.
News January 13, 2026
ஈரோடு: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377
2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639
3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.கடலோர பகுதியில் அவசர உதவி-1093
8.ரத்த வங்கி – 1910
9.கண் வங்கி -1919
10.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989


