News April 22, 2024
எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான 2,018 வழக்குகளில் தீர்ப்பு

எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான 2,018 கிரிமினல் வழக்குகளில் கடந்த ஒரே ஆண்டில் தீர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2023 ஜன. 1 நிலவரப்படி 4,697 வழக்குகள் நிலுவையில் இருந்தன. அதில், 2,018 வழக்குகளில் சிறப்பு நீதிமன்றங்கள் தீர்ப்பளித்துள்ளன. எனினும் புதிதாக 1,746 வழக்குகள் பதிவானதால், நிலுவை வழக்குகள் 4,472ஆக அதிகரித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பே விரைந்து தீர்ப்பளிக்க காரணமாக கூறப்படுகிறது.
Similar News
News August 22, 2025
BREAKING: விடுமுறை.. தமிழக அரசு புதிய அறிவிப்பு

தூய்மை பணியாளர்களுக்கு சுழற்சி முறையில் வாரம் ஒரு நாள் விடுப்பு வழங்க ஊரக வளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு அத்துறையின் ஆணையர் பொன்னையா அனுப்பியுள்ள கடிதத்தில், VPRC, PLF மூலமாக தூய்மை பணியில் ஈடுபடுவோருக்கு வாரம் ஒருமுறை சம்பளத்துடன் விடுப்பு வழங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். தூய்மை பணியாளர்கள் நீண்ட நாள்களாக இக்கோரிக்கையை அரசுக்கு வைத்திருந்தனர்.
News August 22, 2025
பெண்களை ஏளனமாக பேசும் திமுக அமைச்சர்கள்: நயினார்

விருதுநகரில் மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக முறையிட்ட பெண்களிடம், ‘கம்மல் இருந்தால் ₹1,000 தர முடியாது’ என அமைச்சர் <<17480686>>KKSSR<<>> பேசியது சர்ச்சையாகியுள்ளது. இந்நிலையில், திட்டங்களை தருகிறோம் என்ற பெயரில் மென்மேலும் திமுக அமைச்சர்கள் பெண்களை ஏளனமாக பேசுவது கண்டிக்கத்தக்கது என நயினார் நாகேந்திரன் சாடியுள்ளார். இதற்கு அமைச்சர், தமிழகப் பெண்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
News August 22, 2025
BREAKING: பாஜகவில் இணையும் திமுகவின் முகம்

திமுகவின் Ex செய்தித்தொடர்பாளர் KS ராதாகிருஷ்ணன் அமித்ஷா முன்னிலையில் இன்று பாஜகவில் இணைகிறார். நெல்லையை சேர்ந்த இவர், Ex முதல்வர்கள் காமராஜர், கருணாநிதி ஆகியோருடன் நல்ல நட்பில் இருந்தவர். கடந்த 2022-ல் மல்லிகார்ஜுன கார்கேவை விமர்சனம் செய்ததற்காக திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். 1989, 1996 தேர்தல்களில் கோவில்பட்டியில் போட்டியிட்ட இவர், தென் மாவட்டங்களில் இப்போதும் திமுகவின் முகமாக அறியப்படுகிறார்.