News April 22, 2024
காஞ்சிபுரம்: கணவன் – மனைவி பிரச்னையில் தற்கொலை

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் படப்பை அருகே ஆதனஞ்சேரி கிராமத்தை சேர்ந்த விக்னேஷ், வெல்டிங் தொழில் செய்து வந்துள்ளார். திருமணமாகி ஓராண்டு நிறைவடைந்த நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்த நிலையில், விக்னேஷ் கொக்கு மருந்து சாப்பிட்டுள்ளார். தொடர்ந்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று(ஏப்.22) உயிரிழந்தார்.
Similar News
News October 21, 2025
காஞ்சிபுரம்: 10th பாஸ் போதும்…இஸ்ரோவில் வேலை!

ஸ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி மையம் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு பதவிகளில் உள்ள 141 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10th பாஸ் முதல் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.56,100 – ரூ.1,77,500 வரை வழங்கப்படும். 18-35 வயதுடையவர்கள் இங்கே <
News October 21, 2025
காஞ்சிபுரம்: பட்டு சேலைகளின் விலை உயர்வு!

தங்கம், வெள்ளி விலை தாறுமாறாக உயர்ந்துள்ளதால், பட்டுச் சேலைகளின் மூலப்பொருளான ஜரிகை விலை, ஒரே ஆண்டில் கிலோவுக்கு ரூ.50,000 வரை உயர்ந்து, ரூ.1.35 லட்சமாகியுள்ளது. இதனால் சாதாரண பட்டுச் சேலையின் விலை ரூ.10,000-15,000லிருந்து ரூ.20,000 வரை உயர்ந்துள்ளது.இதனால் சாமானியர்களால் வாங்க முடியாத பொருளாக பட்டு சேலை இருக்கிறது. இப்போது விற்பனை பாதிக்கப்பட்டு, நெசவுத் தொழிலுக்குப் பெரும் சிக்கல் உருவாகியுள்ளது
News October 21, 2025
காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ஆரஞ்சு ALERT!

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று (அக்.21) காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே இன்று வெளியே செல்லும் மக்கள் குடை, ரெயின் கோர்ட் உள்ளிட்டவற்றை முன்னெச்சரிக்கையாக எடுத்து செல்லுங்கள். அண்டை மாவட்டங்களான சென்னை, செங்கல்பட்டிற்கும் மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.