News April 22, 2024
மணிப்பூரில் 11 மையங்களில் இன்று மறு வாக்குப்பதிவு

மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்பட்ட 11 வாக்குப்பதிவு மையங்களில் இன்று மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மணிப்பூரில் உள்ள 2 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்.19ஆம் தேதி முதற்கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது இம்பால் கிழக்கு, மேற்கு மாவட்டங்களில் பல்வேறு ஓட்டுப்பதிவு மையங்களில் வன்முறை வெடித்தது. காங்கிரஸ் கட்சி புகாரைத் தொடர்ந்து மறு வாக்குப்பதிவுக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
Similar News
News April 11, 2026
விஜய் கடைசி நேரத்தில் மாற்றினார்.. தவெகவினர் ஷாக்

தேர்தல் பரப்புரையை விஜய் அடுத்தடுத்து ரத்து செய்வது தவெகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏப்.6-ல் தி.நகர், வில்லிவாக்கம் பரப்புரை ரத்தானது போல இன்றைய கடலூர் பரப்புரையும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், நாளை குமரியில் நடைபெற இருந்த பரப்புரையையும் விஜய் ரத்து செய்துள்ளார். அதேபோல், ஏப்.13-ல் கும்மிடிப்பூண்டியில் மேற்கொள்ளவிருந்த பரப்புரையும் ஏப்.19-க்கு மாற்றப்பட்டுள்ளது.
News April 11, 2026
10, +2 தேர்வு முடிவுகள் தேதி.. புதிய செய்தி வந்தது

10, +2 பொதுத்தேர்வு வெளியாகும் தேதி மாற்றப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மே 8-ல் 12-ம் வகுப்பு, மே 20-ல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டிருந்தது. ஆனால், தேர்தல் காரணமாக விடைத்தாள்கள் திருத்தும் பணியில் சற்று தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாம். இதனால், தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதியில் மாற்றம் இருக்கலாம் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
News April 11, 2026
10, +2 தேர்வு முடிவுகள் தேதி.. புதிய செய்தி வந்தது

10, +2 பொதுத்தேர்வு வெளியாகும் தேதி மாற்றப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மே 8-ல் 12-ம் வகுப்பு, மே 20-ல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டிருந்தது. ஆனால், தேர்தல் காரணமாக விடைத்தாள்கள் திருத்தும் பணியில் சற்று தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாம். இதனால், தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதியில் மாற்றம் இருக்கலாம் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


