News April 21, 2024
நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைக்க…

நீரிழிவு நோயாளிகள் உணவில் வாழைப்பூ, பாகற்காய், வெந்தயம் ஆகியவற்றை அடிக்கடி எடுத்துக் கொள்ள வேண்டும். நாவல் கொட்டை, மருதம் பட்டை, சிறுகுறிஞ்சான், வேப்பம் பட்டை, கடலழிஞ்சில் ஆகிய ஐந்தையும் சம அளவு பொடி செய்து காலை, இரவு ஆகிய நேரங்களில் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். அதே போல, ஆவாரம்பூ, சுக்கு, ஏலக்காய் சேர்த்து கொதிக்க வைத்த நீரை கசாயமாக பருகலாம்.
Similar News
News February 18, 2026
FLASH: காய்கறிகளின் விலை குறைந்தது

பூஜை முதல் உணவு வரை பயன்படுத்தப்படும் தேங்காய் விலை குறைந்துள்ளது. 1 தேங்காய் ₹35 – ₹40 வரை விற்கப்பட்ட நிலையில், தற்போது ₹25 – ₹30 வரை விற்பனையாவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதேபோல், புடலங்காய் ₹22 – ₹25-லிருந்து ₹3 – ₹5 குறைந்து ₹19 – ₹22 வரை விற்பனையாகிறது. வெள்ளரிக்காயும் ₹10-க்கு விற்பனையாகிறது. இவற்றின் வரத்து அதிகரிப்பால் விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
News February 18, 2026
OPS-க்கு தூணாய் துணை நிற்கும் அந்த ஒரே நபர்!

OPS-க்கு துணையாக இருந்த EX அமைச்சர்கள், MLA-க்கள் பலரும் திமுக, அதிமுக, தவெகவில் இணைந்தனர். முக்கிய தலைவர்களில் தற்போது உசிலம்பட்டி MLA ஐயப்பன் மட்டுமே OPS-க்கு துணை நிற்கிறார். அதனால், வரும் தேர்தலில் யாருடன் கூட்டணி வைத்தாலும் அவருக்கு ஒரு தொகுதியை உறுதி செய்வதில் OPS முனைப்பு காட்டி வருகிறாராம். OPS-ன் அரசியல் வழிகாட்டியாக இருந்த <<19171680>>பண்ருட்டி ராமச்சந்திரன் தனிக் கட்சி<<>> தொடங்கியது கவனிக்கத்தக்கது.
News February 18, 2026
தூங்கி எழுந்தவுடன் இந்த அறிகுறி இருக்கா.. DANGER

வயதானவர்களை பாதித்த சர்க்கரை நோய், தற்போது சிறு குழந்தைகளையும் தாக்கி வருகிறது. நீரிழிவு நோயின் அறிகுறிகளை மக்கள் புரிந்து கொள்வதே இல்லை. காலை எழுந்ததுமே உடலில் தெரியும் சில அறிகுறிகள் சர்க்கரை நோய் பாதிப்பாக இருக்கலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். அவை என்னென்ன என தெரிந்து கொள்ள போட்டோவை இடது புறமாக Swipe செய்து பார்க்கவும். இந்த விழிப்புணர்வு பதிவை அனைவருக்கும் ஷேர் செய்யவும்.


