News April 21, 2024
இந்தியாவில் வாழ்ந்த உலகின் மிக நீளமான பாம்பு

குஜராத்தின் பண்டாரோ பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் சுமார் 15 மீட்டர் நீளமுள்ள ராட்சத பாம்பின் படிமத்தை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். வாசுகி என பெயரிடப்பட்ட இந்த பாம்பு, 4.7 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த 1,000 கிலோ எடை கொண்ட பாம்பு எனக் கூறப்படுகிறது. 1921ஆம் ஆண்டு ஒரு பச்சை அனகோண்டா உலகின் மிக நீளமான பாம்பு என்ற கின்னஸ் சாதனை பெற்றது. அதன் நீளம் 10 மீட்டர் அகும்.
Similar News
News November 17, 2025
வெளிமாநிலங்களுக்கு ஆம்னி பஸ்கள் இயங்காது

கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு ஆம்னி பஸ்கள் இயக்கப்படாது என ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. கேரளாவில் சமீபத்தில் ஆம்னி பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக, கடந்த 7 நாள்களுக்கு மேல் மாநிலங்களுக்கு இடையேயான ஆம்னி பஸ்கள் இயங்கவில்லை. இந்நிலையில், வெளிமாநிலங்களுக்கு ஆம்னி பஸ்கள் இயங்காது என்றும், முதல்வர் இவ்விவகாரத்தில் தலையிட வேண்டும் எனவும் கூறியுள்ளது.
News November 17, 2025
வருவாய்த்துறையினரின் டிமாண்ட் என்ன?

நாளை <<18309481>>ஸ்ட்ரைக்கில்<<>> ஈடுபடவுள்ள வருவாய் துறையினர் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்: *SIR பணியால் அனைத்து நிலை அலுவலர்களுக்கும் நெருக்கடி, மனஉளைச்சல் ஏற்படுகிறது. இதற்கு நடவடிக்கை தேவை *மீட்டிங் என்ற பெயரில் துன்புறுத்தக்கூடாது *SIR பணிக்கு உரிய கால அவகாசம் வேண்டும் *BLO, BLA-க்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் *பணிப்பளுவை கருத்தில் கொண்டு ஒரு மாத கால ஊதியத்தை மதிப்பூதியமாக வழங்க வேண்டும்.
News November 17, 2025
விஜய் கட்சிக்கு இதனால் பின்னடைவா?

SIR பணிகளில் மக்களுக்கு உதவ தவெகவில் போதுமான பூத் கமிட்டி ஆட்கள் இல்லை என பேசப்படுகிறது. ஒரு கட்சியின் வளர்ச்சிக்கு பூத் கமிட்டி அவசியம். திமுகவும், அதிமுகவும் அந்த பேஸ்மெண்ட்டை பலமாக வைத்திருப்பதால்தான் மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்குடன் இருக்கின்றன. எனவே தவெகவுக்கு இதனால் பின்னடைவு ஏற்படலாம் எனவும் கூடிய விரைவில் பூத் கமிட்டியை பலமாக கட்டமைக்க வேண்டும் எனவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.


