News November 17, 2025

புதுவையில் கத்தியுடன் சுற்றித்திரிந்த 3 பேர் கைது

image

புதுவை சாரம் தென்றல் நகரில் பொதுமக்களை கத்தியை காட்டி ஒரு கும்பல் மிரட்டுவதாக கோரிமேடு போலீசுக்கு தகவல் வந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றபோது. அந்த கும்பல் தப்பியோட முயன்றது. அவர்களை போலீசார் பிடித்து விசாரித்ததில் அவர்கள் புதுவையைச் சேர்ந்த சக்தி என்ற சத்திய மூர்த்தி, நைனார் மண்டபம் மாதேஷ், உருளையன்பேட்டை வேல்முருகன் என தெரிய வந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Similar News

News November 17, 2025

புதுச்சேரி: கூட்டணியில் இருந்து வெளியேறும் முதல்வர்

image

புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ரங்கசாமியிடம், பிஜேபி கூட்டணியில் தொடர்கின்றீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது, இதற்கு முதல்வர், தற்போது வரை தேசிய ஜன நாயக கூட்டணியில் தொடர்கிறோம், தேர்தல் நேரத்தில் கூட்டணிகள் குறித்து முடிவு எடுக்கப்படும் என்று சூசகமாக தெரிவித்துள்ளார். இது அவர் தேசிய ஜனநாயக கூட்டணி இருந்து வெளியேறுவதை உறுதிப்படுத்துவதாகவே இருந்தது.

News November 17, 2025

புதுச்சேரி: கூட்டணியில் இருந்து வெளியேறும் முதல்வர்

image

புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ரங்கசாமியிடம், பிஜேபி கூட்டணியில் தொடர்கின்றீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது, இதற்கு முதல்வர், தற்போது வரை தேசிய ஜன நாயக கூட்டணியில் தொடர்கிறோம், தேர்தல் நேரத்தில் கூட்டணிகள் குறித்து முடிவு எடுக்கப்படும் என்று சூசகமாக தெரிவித்துள்ளார். இது அவர் தேசிய ஜனநாயக கூட்டணி இருந்து வெளியேறுவதை உறுதிப்படுத்துவதாகவே இருந்தது.

News November 17, 2025

புதுச்சேரி: அரசு கல்வி இயக்ககம் நிதி வழங்கல்

image

புதுச்சேரி சட்டப்பேரவையில் அரசு, உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில், புதுச்சேரியில் மருத்துவம், செவிலியர் மற்றும் தொழில்நுட்பம் பயிலும் மாணவர்களின் வளர்ச்சிக்காக, பெருந்தலைவர் காமராஜர் நிதி உதவித்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 2021-22 கல்வியாண்டில் மருத்துவம் மற்றும் செவிலியர் படிப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு ரூ.3,14,70,000 முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.

error: Content is protected !!