News April 21, 2024
தோ்தல் புறக்கணிப்பு போராட்டம் நடத்தியவர்கள் மீது வழக்கு

போடி, பொட்டிப்புர பொதுமக்கள் கடந்த ஏப்.19 அன்று அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி தோ்தலை புறக்கணிப்பதாக கூறி கருப்புக்கொடியை தெருக்களில் கட்டியிருந்தனர். மேலும் தோ்தலை புறக்கணித்து தெருவில் அமா்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டனா். தோ்தல் விதிகளை மீறி பதாகை கட்டியதாக தோ்தல் விடியோ கண்காணிப்புப் படை அலுவலர் அளித்த புகாரில் கிராம மக்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Similar News
News November 5, 2025
வகுப்பறை கட்டுமான பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்

தேனி மாவட்டம், மஞ்சிநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.18 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் இன்று (04.11.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
News November 4, 2025
சின்னமனூரில் மின்தடை ரத்து

நாளை (05.11.2025) பராமரிப்பு பணி காரணமாக 110 KV மார்க்கையன்கோட்டை துணை மின் நிலையங்களில் உள்ள பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டிருந்தது. நிர்வாக காரணங்களால், மேற்கண்ட பராமரிப்பு பணிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை அனைத்து பகுதிகளிலும் மின்சாரம் இருக்கும் என மின்செயற்பொறியாளர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 4, 2025
தேனி: Gpay, Phonepe, paytm பயன்படுத்துகிறீர்களா?

தேனி மக்களே Gpay, Phonepe, paytm தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்ப, பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.


