News April 21, 2024
தோல்விக்கான காரணம் குறித்து ரிஷப் பண்ட் விளக்கம்

‘பவர் பிளே’ தான் தோல்விக்கு காரணம் என டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் கூறியுள்ளார். போட்டிக்கு பின் பேசிய அவர், முதல் 6 ஓவர்களிலேயே எதிரணி 125 ரன்களை குவித்து விட்டது. அதன்பின் அவர்களை கட்டுப்படுத்தும் முயற்சியில் மட்டுமே ஈடுபட முடிந்தது. ஆனால், 260-270 ரன்களை சேஸ் செய்ய வேண்டி இருக்கும் என்று நினைக்கவில்லை. அடுத்து வரும் போட்டிகளில், தெளிவான மனநிலையுடன் களமிறங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
Similar News
News November 12, 2025
டெல்லி கார் வெடிப்பு: NIA-க்கு அமித்ஷா புதிய உத்தரவு

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தின் விசாரணை காவல்துறையிடம் இருந்து NIA-விற்கு நேற்று மாற்றப்பட்டது. இதனையடுத்து NIA அனைத்து கோணங்களிலும் விசாரித்து வருகிறது. இதனிடையே வழக்கின் விசாரணை அறிக்கையை விரைவில் தாக்கல் செய்ய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார். அதேபோல், சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட சாம்பிள்களை தீவிரமாக ஆய்வு செய்ய தடயவியல் குழுவுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.
News November 12, 2025
மீண்டும் இபிஎஸ் உடன் இணைகிறார்களா?

தவெக கூட்டணிக்கு வராத நிலையில், OPS, TTV, செங்கோட்டையனை கூட்டணியில் சேர்க்க EPS-க்கு பாஜக அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முதலில் மறுத்த EPS, பின்னர் கள சூழலை புரிந்து, கூட்டணியில் சேர்க்க, ஒரு கண்டிஷனை போட்டுள்ளாராம். அம்மூவரும் தனி சின்னத்தில் போட்டியிட்டுக் கொள்ளலாம் என நிபந்தனை விதித்துள்ளாராம். இதற்கு பாஜக உள்பட சம்பந்தப்பட்டவர்கள் ஓகே சொல்லுவார்களா?
News November 12, 2025
பள்ளிகளுக்கு 2 நாள்கள் கூடுதல் விடுமுறையா?

2026-ம் ஆண்டுக்கான பொது விடுமுறை பட்டியலை அரசு நேற்று வெளியிட்டது. இதில், ஜன.15 பொங்கல், ஜன.16 திருவள்ளுவர் தினம், ஜன.17 உழவர் திருநாள் ஆகிய 3 நாள்கள் மட்டுமே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாணவர்கள், பொதுமக்கள் பொங்கலுக்கு சொந்த ஊர் செல்ல ஏதுவாக ஜன.13 & போகி பண்டிகையான ஜன.14-ம் தேதியும் கூடுதல் விடுமுறை அளிக்க கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து அரசு பரிசீலனை செய்யும் என தெரிகிறது.


