News April 21, 2024

11 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு

image

தமிழகம், மணிப்பூர் உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளுக்கு ஏப்.19இல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் மணிப்பூரில் 2 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இதனிடையே, வாக்குப்பதிவின் போது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதால் அங்கிருந்த வாக்காளர்கள் வாக்களிக்காமல் அலறி ஓடினர். இதன் காரணமாக மணிப்பூரில் 11 வாக்குச்சாவடிகளில் நாளை (ஏப்.22) மறு வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 12, 2025

மீண்டும் இபிஎஸ் உடன் இணைகிறார்களா?

image

தவெக கூட்டணிக்கு வராத நிலையில், OPS, TTV, செங்கோட்டையனை கூட்டணியில் சேர்க்க EPS-க்கு பாஜக அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முதலில் மறுத்த EPS, பின்னர் கள சூழலை புரிந்து, கூட்டணியில் சேர்க்க, ஒரு கண்டிஷனை போட்டுள்ளாராம். அம்மூவரும் தனி சின்னத்தில் போட்டியிட்டுக் கொள்ளலாம் என நிபந்தனை விதித்துள்ளாராம். இதற்கு பாஜக உள்பட சம்பந்தப்பட்டவர்கள் ஓகே சொல்லுவார்களா?

News November 12, 2025

பள்ளிகளுக்கு 2 நாள்கள் கூடுதல் விடுமுறையா?

image

2026-ம் ஆண்டுக்கான பொது விடுமுறை பட்டியலை அரசு நேற்று வெளியிட்டது. இதில், ஜன.15 பொங்கல், ஜன.16 திருவள்ளுவர் தினம், ஜன.17 உழவர் திருநாள் ஆகிய 3 நாள்கள் மட்டுமே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாணவர்கள், பொதுமக்கள் பொங்கலுக்கு சொந்த ஊர் செல்ல ஏதுவாக ஜன.13 & போகி பண்டிகையான ஜன.14-ம் தேதியும் கூடுதல் விடுமுறை அளிக்க கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து அரசு பரிசீலனை செய்யும் என தெரிகிறது.

News November 12, 2025

ஜடேஜாவை நீக்குவது தோனியின் முடிவா?

image

CSK-வில் ஜடேஜாவை நீக்கி, சஞ்சு சாம்சனை கொண்டுவருவது தோனியின் முடிவாக இருக்கலாம் என Ex. இந்தியன் கிரிக்கெட்டர் முகமது கைஃப் கூறியுள்ளார். தோனி விளையாடும் கடைசி ஐபிஎல் சீசன் இதுவாக இருக்கலாம் என கூறிய அவர், சஞ்சு சாம்சனை உள்ளே கொண்டு வரும் தோனி அவரை அடுத்த கேப்டனாக்க பயிற்சி கொடுக்கலாம் எனவும் கூறினார். மேலும், சென்ற முறை ஜடேஜாவால் தலைமை பொறுப்பை சரியாக கையாள முடியவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

error: Content is protected !!