News April 21, 2024

எட்டுக்குடி: சித்திரை பெருவிழா கோலாகலம்

image

முருகனின் ஆதிபடை வீடான எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சித்திரை பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. ஏழாம் நாள் திருவிழாவான நேற்று இரவு ஓலைச் சப்ரத்தில் வெள்ளி ரிஷப வாகன சககோபுர காட்சி மின்விளக்கு அலங்காரத்தோடு விமர்சையாக நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று முருகப்பெருமானை அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

Similar News

News September 26, 2025

நாகை: Gas Cylinder-க்கு அதிக பணம் கொடுக்காதீங்க!

image

நாகை மக்களே அத்தியாவசிய வீட்டு உபயோகமான Gas Cylinder போடா வருபவர்கள் Bill விலையை விட அதிகமாக பணம் கேட்டா இனிமே கொடுக்காதீங்க! அப்படி பணம் அதிகமா கேட்டா 18002333555 எண்ணுக்கு அல்லது <>https://pgportal.gov.in/<<>> இந்த இணையதளத்தில் உடனே Complaint பண்ணலாம். இண்டேன், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பி க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News September 26, 2025

தமிழ்நாடு உரிமைகள் திட்டம் குறித்து விளக்க கூட்டம்

image

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், தமிழ்நாடு உரிமைகள் திட்டம் குறித்து அனைத்து துறைகள் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கான விளக்க கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் (செப்.25) நடைபெற்றது. உடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மு.கார்த்திகேயன் உள்ளார்.

News September 26, 2025

நாகை: தேர்வு மையத்திற்கு பறக்கும் படை!

image

நாகை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு 13 மையங்களில் 28ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை கண்காணிக்க 13 முதன்மை கண்காணிப்பாளர்கள், 4 சுற்றுக்குழு அலுவலர்கள், 13 ஆய்வு அலுவலர்கள், ஒரு பறக்கும் படை அலுவலர், ஒரு கண்காணிப்பு அலுவலர் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!