News April 21, 2024

ஆற்றில் படகு கவிழ்ந்து 58 பேர் பலி

image

மத்திய ஆப்பிரிக்க குடியரசு நாட்டில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 58 பேர் பலியாகியுள்ளனர். தலைநகர் பெங்குய்யில் இறுதிசடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்க போகோ ஆற்றில் படகில் 300 பேர் சென்று கொண்டிருந்தனர். அளவுக்கு அதிகமாக ஆள்கள் ஏற்றியதன் காரணமாக பழு தாங்க முடியாமல் படகு கவிழ்ந்தது. இதில் 58 பேர் தண்ணீரில் மூழ்கி பலியாகினர். எஞ்சியோரை தேடும் பணி நடைபெறுகிறது.

Similar News

News November 12, 2025

மீண்டும் இபிஎஸ் உடன் இணைகிறார்களா?

image

தவெக கூட்டணிக்கு வராத நிலையில், OPS, TTV, செங்கோட்டையனை கூட்டணியில் சேர்க்க EPS-க்கு பாஜக அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முதலில் மறுத்த EPS, பின்னர் கள சூழலை புரிந்து, கூட்டணியில் சேர்க்க, ஒரு கண்டிஷனை போட்டுள்ளாராம். அம்மூவரும் தனி சின்னத்தில் போட்டியிட்டுக் கொள்ளலாம் என நிபந்தனை விதித்துள்ளாராம். இதற்கு பாஜக உள்பட சம்பந்தப்பட்டவர்கள் ஓகே சொல்லுவார்களா?

News November 12, 2025

பள்ளிகளுக்கு 2 நாள்கள் கூடுதல் விடுமுறையா?

image

2026-ம் ஆண்டுக்கான பொது விடுமுறை பட்டியலை அரசு நேற்று வெளியிட்டது. இதில், ஜன.15 பொங்கல், ஜன.16 திருவள்ளுவர் தினம், ஜன.17 உழவர் திருநாள் ஆகிய 3 நாள்கள் மட்டுமே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாணவர்கள், பொதுமக்கள் பொங்கலுக்கு சொந்த ஊர் செல்ல ஏதுவாக ஜன.13 & போகி பண்டிகையான ஜன.14-ம் தேதியும் கூடுதல் விடுமுறை அளிக்க கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து அரசு பரிசீலனை செய்யும் என தெரிகிறது.

News November 12, 2025

ஜடேஜாவை நீக்குவது தோனியின் முடிவா?

image

CSK-வில் ஜடேஜாவை நீக்கி, சஞ்சு சாம்சனை கொண்டுவருவது தோனியின் முடிவாக இருக்கலாம் என Ex. இந்தியன் கிரிக்கெட்டர் முகமது கைஃப் கூறியுள்ளார். தோனி விளையாடும் கடைசி ஐபிஎல் சீசன் இதுவாக இருக்கலாம் என கூறிய அவர், சஞ்சு சாம்சனை உள்ளே கொண்டு வரும் தோனி அவரை அடுத்த கேப்டனாக்க பயிற்சி கொடுக்கலாம் எனவும் கூறினார். மேலும், சென்ற முறை ஜடேஜாவால் தலைமை பொறுப்பை சரியாக கையாள முடியவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

error: Content is protected !!