News November 17, 2025
தஞ்சை: சாலை விபத்தில் நீதிமன்ற ஊழியர் பலி

பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்து வந்த பள்ளிகொண்டான் சேர்ந்த பாலாஜி இரு தினங்களுக்கு முன் பணி முடிந்து வீடு திரும்பும்போது, கரிக்காடு பயணியர் மாளிகை அருகே சாலையில் இருந்த சென்டர் மீடியனில் மோதி படுகாயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Similar News
News November 17, 2025
தஞ்சை: முதியவரிடம் ரூ.93 லட்சம் மோசடி

பாபநாசம் அருகே முருகப்பன் என்பவரை செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் உங்கள் வங்கி கணக்கில் இருந்து பல கோடி ரூபாய் சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. உங்கள் ஆதார் அட்டையை பயன்படுத்தி போலியாக சிம் கார்டுகள் வாங்கி பாலியல் குற்றம், ஆள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என மிரட்டி ரூபாய் 93 லட்சத்தை பெற்று ஏமாற்றியுள்ளனர். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
News November 17, 2025
தஞ்சை அருகே போலி மருத்துவர் கைது

தஞ்சை மாவட்டம், திருவோணம் அருகே வெட்டிக்காடு பகுதியில் மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பார்த்து வந்த மகாலிங்கம் (67) என்பவரை சுகாதாரப் பணி இணை இயக்குனர் (பொ) அருள்செல்வனின் உத்தரவின் பேரில் மருத்துவக் குழுவினர் கைது செய்தனர். பி.காம் படித்துவிட்டு பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்த இவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் ஏராளமான மருந்து, மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன.
News November 17, 2025
தஞ்சை: B.E போதும் வங்கி வேலை ரெடி!

பேங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 115 Specialist Officers (SO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: பொதுத்துறை
2. சம்பளம்: ரூ.64,820 – 1,20,940/-
3. கல்வித் தகுதி: B.E/B.Tech, Master Degree, LLB, Post Graduate
5. வயது வரம்பு: 22-40 (SC/ST-45, OBC-43)
6. கடைசி தேதி: 30.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


