News November 17, 2025
BREAKING: முதல்வர் ஸ்டாலின் வீட்டில் பரபரப்பு

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள CM ஸ்டாலினின் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக, போலீஸ் தலைமை இயக்குநர் இ-மெயிலுக்கு நள்ளிரவில் மிரட்டல் வந்துள்ளது. இதனால் பதறிப்போன போலீசார் CM வீட்டில் தீவிர சோதனை மேற்கொண்டனர். சோதனையில், அது வெறும் வதந்தி என தெரிய வந்தது. சமீப காலமாகவே அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்களின் வீடுகளுக்கு மிரட்டல் விடுக்கப்படுவதால், சைபர் கிரைம் தீவிரமாக விசாரித்து வருகிறது.
Similar News
News November 17, 2025
பொங்கல் விடுமுறை… வந்தது HAPPY NEWS

பொங்கல் விடுமுறையில் ஊருக்கு போக ரயிலில் டிக்கெட் கிடைக்கவில்லை என சோகத்தில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. 150-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. டிச.15 முதல் கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல், பொங்கலுக்கு ஊருக்குச் செல்பவர்கள் பணியிடங்களுக்கு திரும்புவதற்கும் கூடுதல் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
News November 17, 2025
பொங்கல் விடுமுறை… வந்தது HAPPY NEWS

பொங்கல் விடுமுறையில் ஊருக்கு போக ரயிலில் டிக்கெட் கிடைக்கவில்லை என சோகத்தில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. 150-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. டிச.15 முதல் கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல், பொங்கலுக்கு ஊருக்குச் செல்பவர்கள் பணியிடங்களுக்கு திரும்புவதற்கும் கூடுதல் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
News November 17, 2025
85,000 புள்ளிகளை நெருங்கிய சென்செக்ஸ்

வாரத்தின் முதல் நாளான இன்று, இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. 388 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ், 84,950.95 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதேபோல 103.40 புள்ளிகள் உயர்ந்த நிப்டி 26,013.45 புள்ளிகளில் நிறைவு செய்தது. குறிப்பாக ஆட்டோ, எனர்ஜி, மீடியா துறைகள் ஏற்றம் கண்டன. முதல் நாளே பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


