News November 17, 2025

நாமக்கல்: 3,739 கோடி ரூபாய் கடன் – தகவல்

image

நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில், கூட்டுறவு வார விழாவில் கொடி ஏற்றி விழாவை துவக்கி வைத்த நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஸ்குமார் எம்.பி கூட்டுறவு வங்கி மூலம், பயிர் கடன், விவசாயம் சார்ந்த கடன் உள்பட, 3,739 கோடி ரூபாய் கடன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 1,911 கோடி ரூபாய் வழங்கப்பட்டு, 51 சதவீதம் இலக்கை அடைந்துள்ளோம்’ என செய்தியாளர்களிடம் கூறினார்.

Similar News

News March 18, 2026

நாமக்கல்: ரோடு சரியில்லையா? உடனே இத பண்ணுங்க!

image

நாமக்கல் மக்களே, உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து<> “நம்ம சாலை” <<>>செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News March 18, 2026

நாமக்கல்: EC, பட்டா, சிட்டா.. இனி WhatsApp-ல்

image

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1) 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2) WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3) மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.
4) நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp-ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க

News March 18, 2026

BREAKING நாமக்கல் கலெக்டர் ஆபிசுக்கு வெடிகுண்டு மிரட்டல்

image

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் நல்லிபாளையம் பகுதியில் அமைந்துள்ளது. இன்று ஆட்சியர் துர்கா மூர்த்தி அவர்களின் இமெயில் ஐடிக்கு வெடிகுண்டு மிரட்டல் மெயில் வந்ததை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முழுவதும் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. இதனால் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகம் முழுவதும் பெரும் பரபரப்பாக காணப்படுகிறது.

error: Content is protected !!