News November 17, 2025
வேலூர்: 25 பவுன் நகை, பணம் கொள்ளை!

வேலூர்: கொசப்பேட்டை திருமலை தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன் (56) தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது 25 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் பணம் திருடு போயிருப்பது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த அவர் வேலூர் தெற்கு போலீசில் புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News November 17, 2025
SIR படிவங்களை உதவி மையங்களில் பூர்த்தி செய்யலாம்

வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான சுப்புலெட்சுமி இன்று (நவ.17) அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், வேலூர் மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்ய அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தை அணுகி பூர்த்தி செய்து கொள்ளலாம் என தெரிவித்து இருந்தார்.
News November 17, 2025
SIR படிவங்களை உதவி மையங்களில் பூர்த்தி செய்யலாம்

வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான சுப்புலெட்சுமி இன்று (நவ.17) அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், வேலூர் மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்ய அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தை அணுகி பூர்த்தி செய்து கொள்ளலாம் என தெரிவித்து இருந்தார்.
News November 17, 2025
வேலூரில் 4 தாசில்தார்கள் அதிரடி மாற்றம்

வேலூரில் வருவாய் அலகில் 4 தாசில்தார்களை நேற்று (நவ16) பணியிட மாற்றம் செய்து கலெக்டர் இரா.சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளார். குடியாத்தம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் கோடீஸ்வரன் வேலூர் மாவட்ட துணை ஆய்வுக்குழு அலுவலராகவும், வேலூர் கிழங்கு மேலாளராக (டாஸ்மாக்) பணியாற்றி வந்த செல்வி வேலூர் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் தனி தாசில்தார் ஆகவும் பணி மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.


