News November 17, 2025

தருமபுரி: ரயில் விபத்தில் பலி!

image

பொம்மிடி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரயில் மோதி உயிரிழந்து கிடந்தார். சேலம் ரயில்வே காவல்துறை சம்பவ இடத்திற்குச் சென்று உடலை மீட்டு விசாரித்தனர். இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. ரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Similar News

News November 17, 2025

தருமபுரி: கடன் தொல்லை நீங்க இங்கே செல்லுங்கள்

image

தருமபுரி மாவட்டம் தீர்த்தமலையில் பிரசித்தி பெற்ற தீர்த்தகிரீசுவரர் திருக்கோயில் உள்ளது. கடன் தொல்லை உள்ளவர்கள் அமாவாசைக்கு அடுத்த நாள் இந்த இறைவனை தரிசனம் செய்தால் கடன் தொல்லை நீங்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. மேலும், கடன் தொல்லையால் அவதி அடைந்தவர்கள் இங்கு சென்று வழிபட்டதால் தற்போது நல்லவாழ்வு வாழ்வதாக கூறுகின்றனர். கடன் தொல்லை உள்ளவர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க.

News November 17, 2025

தருமபுரி: கேஸ் மானியம் ரூ.300 பெறுவது எப்படி?

image

கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க

News November 17, 2025

தருமபுரி: சுயதொழில் தொடங்க SUPER IDEA!

image

சுயதொழில் தொடங்க ஆசையா? கவலைய விடுங்க! தமிழக அரசு, மாவரைக்கும் இயந்திரம், நிலக்கடலை தோல் உரிக்கும் இயந்திரம், எண்ணெய் பிழிந்தெடுக்கும் செக்கு இயந்திரம் உட்பட பல்வேறு இயந்திரகளை வாங்குவதற்கு, உழவர்களுக்கு ரூ.5 லட்சம் வரை மானியம் வழங்குகிறது. விருப்பமுள்ள நபர்கள்<> ‘உழவன்<<>> செயலி’ மூலமாகவோ அருகில் உள்ள வேளாண்மை துறைச் சார்ந்த அலுலவகத்தை அணுகியும் விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!