News November 17, 2025
தேஜஸ்வியின் அறிவு மங்கிப்போனது: தேஜ் பிரதாப்

தனது சகோதரி ரோஹிணியை இழிவுபடுத்தியதை ஏற்க முடியாது என லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் குரல் எழுப்பியுள்ளார். தனக்கு நடந்ததை கூட பொறுத்துக்கொள்வேன் என கூறிய அவர், தனது சகோதரிக்கு நடந்ததை எந்தவொரு சூழலிலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ரோஹிணியை நோக்கி <<18303650>>செருப்பை<<>> காட்டியது தனக்கு மிகுந்த வலியை ஏற்படுத்தியதாகவும், தேஜஸ்வியின் அறிவு மங்கிப்போய்விட்டது எனவும் சாடியுள்ளார்.
Similar News
News March 18, 2026
வீட்டு கேஸ் சிலிண்டர் உற்பத்தி உயர்ந்தது

சிலிண்டர் தட்டுப்பாட்டால் பலரும் போட்டி போட்டுக் கொண்டு கேஸ் புக்கிங் செய்துவருகின்றனர். இந்நிலையில், வீட்டு கேஸ் சிலிண்டர் உற்பத்தி 38% அதிகரித்துள்ளதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் கூறியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, 45 நாள்களுக்கு ஒருமுறை வீட்டு கேஸ் சிலிண்டர் புக் செய்யலாம். SHARE
News March 18, 2026
இந்த WhatsApp நம்பர்கள் உங்க போனில் அவசியம்!

ATM கார்டு திருடுப் போதல், வங்கிக் கணக்கில் பணம் மாயமாதல் போன்ற எந்த பிரச்னையாக இருந்தாலும், முதலில் கைகொடுப்பது வங்கிகள்தான். எனவே, வங்கிகளின் WhatsApp சேவை எண்கள் போனில் இருப்பது அவசியம் *HDFC- 70700 22222 *SBI- 90226 90226 *Indian Bank- 87544 24242 *ICICI- 86400 86400 *Union Bank- 96666 06060 *Axis bank- 70361 65000 *IDBI- 88600 45678 *Kotak- 77108 11811 *PNB- 92640 92640. SHARE IT.
News March 18, 2026
CV சண்முகத்தின் பேச்சு.. கொந்தளித்த பிரேமலதா

<<19406314>>நடிகை நயன்தாராவை<<>> குறிப்பிட்டு பேசிய சிவி சண்முகத்திற்கு கண்டனங்கள் வலுத்துள்ளன. இந்நிலையில், எந்த அரசியல் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் பெண்களை இழிவுபடுத்துவதை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என பிரேமலதா கூறியுள்ளார். சர்ச்சை பேச்சுகள் தொடர்ந்தால், கட்சிகளுக்கு அப்பாற்பட்டு ஒட்டுமொத்த பெண் சக்திகளையும் ஒன்று திரட்டி மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்பேன் என அவர் எச்சரித்துள்ளார்.


