News November 17, 2025

கள்ளக்குறிச்சியில் மின்தடை! உங்க ஏரியா இருக்கா?

image

கள்ளக்குறிச்சி: வாணாபுரம் அடுத்த அரியலூர் துணை மின் நிலையத்தில் நாளை (நவ.18) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. இதன் காரணமாக அரியலூர், அத்தியூர், மையனூர், சீர்ப்பனந்தல், எடுத்தனூர், ஜம்படை, வாணாபுரம், பகண்டை கூட்டு ரோடு, ஏந்தல், பொற்பாலம்பட்டு, மணியந்தல் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் காலை 9 மணி – மாலை 5 மணிவரை மின்தடை செய்யப்படும் என சங்கராபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் ரகுராமன் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 17, 2025

கள்ளக்குறிச்சி: கேஸ் மானியம் ரூ.300 பெறுவது எப்படி?

image

கேஸ் மானியம் ₹300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News November 17, 2025

கள்ளக்குறிச்சி: சுயதொழில் தொடங்க SUPER IDEA!

image

சுயதொழில் தொடங்க ஆசையா? கவலைய விடுங்க! தமிழக அரசு, மாவரைக்கும் இயந்திரம், நிலக்கடலை தோல் உரிக்கும் இயந்திரம், எண்ணெய் பிழிந்தெடுக்கும் செக்கு இயந்திரம் உட்பட பல்வேறு இயந்திரகளை வாங்குவதற்கு, உழவர்களுக்கு ரூ.5 லட்சம் வரை மானியம் வழங்குகிறது. விருப்பமுள்ள நபர்கள் <>’உழவன் செயலி’<<>> மூலமாகவோ அருகில் உள்ள வேளாண்மை துறைச் சார்ந்த அலுலவகத்தை அணுகியும் விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News November 17, 2025

கள்ளக்குறிச்சி விவசாயிகளுக்கு ஆட்சியர் நற்செய்தி!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் ராபி 2025 பருவத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்ட குறுவட்டங்களில் மரவள்ளி, கத்தரி, வெங்காயம் ஆகிய தோட்டக்கலை பயிர்களை காப்பீடு செய்ய வேண்டும். மத்திய அரசின் தேசிய பயிர் காப்பீடு வலைத்தளம் (http://www.pmfby.gov.in/) பயிர் காப்பீடு செயலியை பயன்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!