News November 17, 2025
திருவாரூர்: பயிர் காப்பீடு தேதி நீட்டிப்பு!

திருவாரூர் மாவட்டம் முழுவதும் சம்பா தாளடி பயிர் காப்பீடு தேதி வருகின்ற நவம்பர் 30 வரை செய்யலாம் என நீட்டிக்கப்பட்டுள்ளது. அது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “27 மாவட்டங்களில் சம்பா நெற்பயிர் காப்பீடு செய்ய மழை மற்றும் சிறப்பு வாக்காளர் திருத்தம் உள்ளிட்ட காரணங்களால் பயிர் காப்பீடு தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.” என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Similar News
News November 17, 2025
திருவாரூர்: B.E., படித்தவர்களுக்கு வங்கியில் வேலை

பேங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 115 Specialist Officers (SO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: பொதுத்துறை
2. சம்பளம்: ரூ.64,820 – 1,20,940/-
3. கல்வித் தகுதி: B.E.,/B.Tech, Master Degree, LLB, Post Graduate
5. வயது வரம்பு: 22-40 (SC/ST-45, OBC-43)
6. கடைசி தேதி: 30.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News November 17, 2025
திருவாரூரில் மழையா? இதை மறக்காதீங்க!

திருவாரூர் மக்களே, தமிழகத்தில் பருவமழை தொடங்கி தீவிரமடையத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் உங்கள் குடியிருப்பு பகுதியில் மழையால் பவர் கட், மின்கம்பி அறுந்து விழுவது, பியூஸ் போவது போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் கவலைப்பட வேண்டாம். ‘94987 94987’ என்ற மின்வாரிய உதவி எண்னை தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண், இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், தமிழகத்தில் எங்கு இருந்தாலும் பழுது நீக்கப்படும்! SHARE
News November 17, 2025
திருவாரூர்: லீவ் குறித்து கலெக்டர் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் செயல்படும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இன்று (நவம்பர் 17) வழக்கம் போல் செயல்படும் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் அறிவித்துள்ளார். குறிப்பாக திருவாரூர் மாவட்டத்திற்கு சென்னை வானிலை மையம் இன்று (நவம்பர் 17) கன மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுத்திருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.


