News November 16, 2025
திண்டுக்கல்: ஆசிரியர் தகுதி தேர்வு 514 பேர் ஆப்சென்ட்

இடைநிலை மற்றும் பட்டதாரி பயிற்சி முடித்தவர்களுக்கு நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு செய்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் 3,490 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். மாவட்டம் முழுவதும் 11 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது. இதில் 2,976 பேர் தேர்வு எழுதியனர், 514 பேர் ஆப்சென்ட் இருந்தனர்.
Similar News
News November 17, 2025
திண்டுக்கல் காவல்துறை எச்சரிக்கை

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை, ஒவ்வொரு நாளும் இணையப் பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வு குறித்த புகைப்படங்களை வெளியிடுகிறது. இதன் தொடர்ச்சியாக, (நவம்பர் 16) இன்று “தேவையற்ற மின்னஞ்சல்கள் மற்றும் லிங்குகளை திறந்து உங்களது தகவல்களை இழக்க வேண்டாம்” என்ற குறிப்பு கொண்ட விழிப்புணர்வு புகைப்படத்தை திண்டுக்கல் மாவட்ட காவல்துறை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டது.
News November 16, 2025
திண்டுக்கல்: இனி வீட்டிலிருந்தே விண்ணப்பிக்கலாம்!

திண்டுக்கல் மக்களே, பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, லைசன்ஸ், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYயாக விண்ணபிக்கலாம்.
1.பான்கார்டு:<
2.வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in
3.ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/
4.பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink
இந்த இணையதளங்களுக்கு சென்று விண்ணப்பியுங்க..(SHARE IT)
News November 16, 2025
திண்டுக்கல் மக்களே.. உடனே SAVE பண்ணுங்க!

திண்டுக்கல்: மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக TNEB சேவை எண் பயன்பாட்டில் உள்ளது . இதன்மூலம் பயனாளர்கள் எங்கிருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க!


