News November 16, 2025
பெரம்பலூர்: ட்ரோன் கேமராக்கள் பறக்க விட்டு ஆய்வு!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகளில், அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாகக் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டனவா என்பதைக் கண்டறிய, சுரங்கத் துறையினர் ட்ரோன் கேமராக்களைப் பயன்படுத்தி ஆய்வு நடத்தினர். விதிமுறை மீறல்கள், சுற்றுச்சூழல் மீறல்கள் குறித்த புகார்கள் எழுந்ததால், இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.
Similar News
News November 16, 2025
பெரம்பலூரில் வாக்காளர்களுக்கு S.I.R படிவங்கள்

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர், குன்னம் சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணியில், இதுவரை 5,81,620 வாக்காளர்களுக்கு, கணக்கீட்டு படிவங்கள் வழங்கப்பட்டு உள்ளது. மேலும், 49,972 விண்ணப்ப படிவங்கள் திரும்ப பெறப்பட்டு, பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட தேர்தல் அலுவலர், ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.
News November 16, 2025
பெரம்பலூர்: B.E படித்தவர்களுக்கு அரசு வேலை!

இந்திய ஸ்டீல் ஆணையத்தில் காலியாக உள்ள Management Trainee பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.50,000 – 1,60,000/-
3. கல்வித் தகுதி: B.E/B.Tech
5. வயது வரம்பு: 18-28 (SC/ST-33, OBC-31)
6. கடைசி தேதி: 05.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: CLICK <
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News November 16, 2025
பெரம்பலூர்: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம்!

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <


