News April 20, 2024
நிம்மதியான உறக்கத்திற்கு…

ஒரு தேக்கரண்டி கசகசாவை எடுத்து இரண்டு முந்திரி பருப்பு சேர்த்து அரைத்து, பசும்பாலில் கலந்து காய்ச்சி சிறிது கற்கண்டு சேர்த்து பருகினால் நிம்மதியான உறக்கத்தை பெறலாம். வெள்ளரி பிஞ்சு, இளநீர், மோர், நீராகாரம், லெமன் ஜூஸ் ஆகியவை சிறுநீரகத்தை குளுமைப்படுத்தும். தும்பைப்பூ, சுக்கு, காயம் இவற்றை எடுத்து நைத்து கடுகு எண்ணெயில் போட்டு காய்ச்சி காதில் சில துளிகள் விட்டால் காது வலி குணமாகும்.
Similar News
News February 9, 2026
தவெகவிற்கு மட்டும் அதிக நிபந்தனைகள் ஏன்? கார்த்தி

அதிக ரசிகர்களை கொண்ட விஜய், அனைத்து கட்சிகளிடம் இருந்தும் கணிசமான வாக்குகளை பறிப்பார், ஆனால் அவை சீட்டாக மாறுமா என்பது சந்தேகமே என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். மேலும் விஜய்யின் கூட்டங்கள் வழக்கமான கட்சி கூட்டம் போல் இல்லாமல், ஏதோ சினிமா கச்சேரி போன்று நடைபெறுகிறது. அதோடு அவர் கூட்டத்தில் தான் அசம்பாவிதம் ஏற்பட்டதால் தவெகவிற்கு அதிக நிபந்தனைகள் அதிகமாக விதிக்கப்படுவதாக கூறியுள்ளார்.
News February 9, 2026
ரத்தான TNPSC குரூப் 2 தேர்வு எப்போது?

ரத்து செய்யப்பட்ட TNPSC Group 2 முதன்மைத் தேர்வு குறிப்பிட்ட காலத்திற்குள் நடத்தப்படும் என தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக இருந்த சண்முகசுந்தரம் தெரிவித்தார். மேலும், இதற்கான ஹால் டிக்கெட், தேர்வு நடைபெறும் 15 நாள்களுக்கு முன்பு கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், பிப்.22-ல் நடைபெறவுள்ள குரூப் 2 பொது அறிவு (தாள் 2) வழக்கமாக நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
News February 9, 2026
காலையில் இதை சாப்பிட்டால் முடி உதிராது

இளம் வயதிலேயே பலரும் முடி உதிர்வு பிரச்னையால் அவதியடைகின்றனர். இது அவர்களை மன ரீதியாகவும் பாதிப்பதாக டாக்டர்கள் கூறுகின்றனர். இந்த பிரச்னைக்கு ஜீன் ஒரு காரணமாக இருந்தாலும், உணவு முறையே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் காலை உணவாக சில சத்தான உணவை எடுப்பதன் மூலம் முடி உதிர்வை தடுக்கலாம். அது என்னென்ன உணவு என்பதை மேலே உள்ள போட்டோக்களை SWIPE செய்து பாருங்க.


