News November 16, 2025

வில்லியனூர் அதிக குடிப்பழக்கத்தால் கூலி தொழிலாளி சாவு

image

புதுவை வில்லியனூரை சேர்ந்தவர் சதீஷ்( 38)
பெயிண்டர். இவர் தந்தை சேகர் (64)கூலி தொழிலாளி. இவரது குடி பழக்கத்தால் இவருக்கு ரத்த அழுத்தம்,
சர்க்கரை நோய்
இருந்தது. இவர் சில நாட்களாக மது குடித்து விட்டு வீட்டுக்கு வராமல்
இருந்துள்ளார். இதனிடையே
தனியார் வணிக வளாகத்தில் சேகர்
இறந்து கிடப்பதாக சதீஷூக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து போலீசார் உடலை கைப்பற்றி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News November 16, 2025

காரைக்காலுக்கு மிக கனமழை எச்சரிக்கை

image

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, காரைக்கால் மாவட்டத்திற்கு இன்று ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் காரைக்கால் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் நாளையும் (நவ.17) இடி, மின்னலுடன் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

News November 16, 2025

புதுச்சேரி: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம்!

image

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <>இங்கு <<>>கிளிக் செய்து அதற்கான தகுதிகளை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News November 16, 2025

புதுவை: ஆன்லைனில் ரூ.6.5 கோடி மோசடி!

image

புதுச்சேரியை சேர்ந்தவர் ஆஷித்குமார், இவரது மொபைலுக்கு வந்த லிங்க்-ஐ பயன்படுத்தி ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டார். பல்வேறு தவணைகளில் சுமார் ரூ.6.5 கோடி முதலீடு செய்துள்ளார். இதன்மூலம் அவருக்கு ஆன்லைனில் ரூ.12.47 கோடி இருப்பதாக காட்டியது. ஆனால் அதனை தனது வங்கி கணக்கிற்கு மாற்ற முடியாமல் தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்தார். இதுகுறித்து அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்துள்ளார்.

error: Content is protected !!