News November 16, 2025

புதுகை: ரூ.1 லட்சம் உதவித்தொகை பெற அழைப்பு!

image

புதுகை மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர், பழங்குடியின எழுத்தாளர்களை மேம்படுத்தும் வகையில், கலை இலக்கிய மேம்பாட்டுச் சங்கம் தோற்றுவிக்கப்பட்டு ரூ.1 லட்சம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகையைப்பெற விரும்புவோர் புதுகை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அலுவலகத்தை நேரில் அணுகி விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் என கலெக்டர் மு.அருணா தெரிவித்துள்ளார்.

Similar News

News November 16, 2025

புதுகை: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம்!

image

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர்<> இங்கு கிளிக்<<>> செய்து அதற்கான தகுதிகளை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News November 16, 2025

புதுகை: மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்!

image

புதுக்கோட்டையில் உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி வரும் (நவ.21) ஆம் தேதி ஓவியப்போட்டி நடத்தப்பட உள்ளது. இதில் செவி, இயக்கம், அறிவு பார்வை ஆகிய திறன்களில் குறைபாடுள்ளோர், புற உலகச் சிந்தனையற்றோர், மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டோர் பங்கேற்கலாம். இதில் பங்குபெற (நவ.19) ஆம் தேதிக்குள் 04322 223678, 99947 99137 எண்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என கலெக்டர் மு.அருணா தெரிவித்துள்ளார்.

News November 16, 2025

புதுகை: ரூ.45,000 சம்பளத்தில் பேங்க் வேலை!

image

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள 91 உதவி மேலாளர் (Assistant Manager) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஏதாவது ஒரு டிகிரி முடித்த, 21 – 30 வயதுக்குட்பட்ட நபர்கள், <>இங்கே <<>>க்ளிக் செய்து இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆரம்ப அடிப்படை சம்பளமாக ரூ.44,500 வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க 30.11.2025 கடைசி நாளாகும். மேலும் விவரங்களுக்கு www.nabard.org/careers அணுகவும். SHARE!

error: Content is protected !!