News November 16, 2025
புதுவை: 55 கி.மீ. வேகத்தில் காற்று எச்சரிக்கை

புதுவை மீன்வளத்துறை இயக்குனர் இஸ்மாயில் வெளியிட்டுள்ள செய்தியில், தென் தமிழக கடலோர பகுதிகளில் இன்று காற்று மணிக்கு சுமார் 55 கி.மீ. வேகம் வரை வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே புதுவையில் உள்ள மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம். மேலும் படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை மீனவர்கள் பாதுகாப்பான இடங்களில் வைக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
Similar News
News November 16, 2025
புதுச்சேரி: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம்!

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <
News November 16, 2025
புதுவை: ஆன்லைனில் ரூ.6.5 கோடி மோசடி!

புதுச்சேரியை சேர்ந்தவர் ஆஷித்குமார், இவரது மொபைலுக்கு வந்த லிங்க்-ஐ பயன்படுத்தி ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டார். பல்வேறு தவணைகளில் சுமார் ரூ.6.5 கோடி முதலீடு செய்துள்ளார். இதன்மூலம் அவருக்கு ஆன்லைனில் ரூ.12.47 கோடி இருப்பதாக காட்டியது. ஆனால் அதனை தனது வங்கி கணக்கிற்கு மாற்ற முடியாமல் தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்தார். இதுகுறித்து அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்துள்ளார்.
News November 16, 2025
புதுச்சேரி: பத்திரிகையாளர்களுக்கு முதல்வர் வாழ்த்து

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நேற்று வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பொதுமக்களின் கருத்தை வடிவமைப்பதிலும், தகவலறிந்த சமூகத்தை உருவாக்குவதிலும், நிர்வாகத்தில் பொறுப்புணர்வை நிலைநிறுத்துவதிலும் ஊடகங்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. உண்மை, துல்லியம் மற்றும் பாரபட்சமற்ற தன்மை ஆகியவற்றை நிலைநிறுத்துவது ஜனநாயகத்தின் அடித்தளம் பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்தார்.


