News November 16, 2025
அரியலூர்: லாரியில் மோதிய வாலிபர் பாலி!

அரியலூர், பொய்யூரை சேர்ந்த பாலமுருகன் (24), இவர் நேற்று காலை உறவினரான ஜனனி (23) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் பெரம்பலூர் மாவட்டம் குன்னத்திற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது பாலமுருகன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் மோதியது. இதில் பால முருகன் சம்பவ இடத்திலேயே இறந்தார். பின்னால் அமர்ந்து வந்த ஜனனி காயங்களுடன் உயிர் தரப்பினார்.
Similar News
News November 16, 2025
அரியலூர்: விபத்தில் பெண் தலைமை காவலர்!

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் காவல் நிலைய பணிக்கு தனது இருசக்கர வாகனத்தில் செல்லும்போது பெண் தலைமை காவலர் விபத்தில் காயம். பெரியதத்தூர் கிராமத்தில் இருந்து வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது மாடு குறுக்கிட்டு வந்து வாகனத்தின் மீது மோதியதால் விபத்து ஏற்பட்டு காயமடைந்தார். உடனடியாக அங்கிருந்து அவர்கள் அவரை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
News November 16, 2025
அரியலூர்: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம்!

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <
News November 16, 2025
அரியலூர்: ஆசிரியர் தகுதித் தேர்வு!

அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், திருமானூர், கயர்லா பாத், செந்துறை, கீழப்பழுவூர், ஜெயங்கொண்டம், உடையார்பாளையம், மீன்சுருட்டி உள்ளிட்ட பகுதிகளில் டெட் பேப்பர் 2 தேர்வு இன்று நடைபெற்று வருகிறது. செந்துறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் அன்னை தெரசா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய தேர்வு மையங்களில் பலர் கலந்து கொண்டு தேர்வு எழுதி வருகின்றனர்.


