News April 20, 2024
தேர்தல் விதிகளை தளர்த்த வேண்டும்

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில், தேர்தல் நடைமுறை விதிகளைத் தளர்த்த வேண்டும் என திமுக எம்பி வில்சன் வலியுறுத்தியுள்ளார். தேர்தல் முடிந்த நிலையிலும், மக்கள் ரூ.50,000க்கு மேல் எடுத்துச் செல்ல தடை தொடர்வது நியாயமற்றதாகும் எனக் கூறிய அவர், மக்கள் நலப் பணிகள் உள்ளிட்டவற்றை தடையின்றி செயல்படுத்த விதிகளை தளர்த்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News November 12, 2025
4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக IMD தெரிவித்துள்ளது. இதன்காரணமாக நெல்லை மாவட்ட மலைப்பகுதிகள், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. மேலும், வரும் 17-ம் தேதி வரை தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
News November 12, 2025
நீண்ட ஆயுளுடன் வாழ இதை செய்யுங்க!

மாறிவரும் வாழ்க்கைச்சூழலில், நமது உடல் ஆரோக்கியம் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, நோய்களை தவிர்த்து உடல்நலத்தை பேண சில செயல்முறைகளை வேண்டியது அவசியமாகிறது. நம் முன்னோர்கள் பின்பற்றிய பழக்கவழக்கங்கள் நோய் நொடியின்றி நீண்ட ஆயுளுடன் வாழ வழிவகை செய்தன. அதனை தற்போது நகர்ப்புறங்களிலும் எளிதாக பின்பற்றலாம். அவற்றை மேலே Swipe செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
News November 12, 2025
இனி SMS-களுக்கும் கட்டணம்!

கோடாக் மகிந்திரா வங்கியில் மினிமம் பேலன்ஸாக ₹10,000 வைத்திருக்க வேண்டும். அதை பராமரிக்காமல் இருந்தால், மாதத்திற்கு 30 SMS மட்டுமே இலவசம் என அந்த வங்கி அறிவித்துள்ளது. 30 SMS-களுக்கு பிறகு, ஒரு SMS-க்கு ₹0.15 வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளது. வரும் டிச.7 முதல் இது நடைமுறைக்கு வர உள்ளது. UPI, ATM, செக் டெபாசிட், டெபிட், கிரெடிட் கார்ட் பரிவர்த்தனை என அனைத்து SMS-களுக்கும் இது பொருந்தும்.


