News November 16, 2025
ஓசூர்: அடுத்தடுத்து திருட்டு; பலே கில்லாடி கைது!

ஓசூர், மூக்கண்ட பள்ளி பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த் (28) & அலசநத்தம் பகுதியை சேர்ந்தவர் அகிலன் (29) இவர்கள் இருவரும் தங்களது பைக்குகளை தங்களது வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தனர். இந்த நிலையில், பைக் திருடு போனது. இதுகுறித்து இவர்கள் இருவரும் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, இதுகுறித்து விசாரித்த போலீசார் திருப்பத்தூர் மாவட்டம் அம்பலூர் பகுதியை சேர்ந்த அன்பழகனை கைது செய்தனர்.
Similar News
News November 16, 2025
கிருஷ்ணகிரி: ரூ.2,00,000 வரை மாணவர்களுக்கு உதவித்தொகை

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்காக மத்திய அரசு பிரதம மந்திரி யசஸ்வி உதவித்தொகை திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன்படி, 9ம் வகுப்பு முதல் டிகிரி படிக்கும் மாணவர்களுக்கு, ஆண்டுக்கு ரூ.4000 – ரூ.2,00,000 வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் மாணவர்கள் <
News November 16, 2025
கிருஷ்ணகிரி: டிகிரி போதும், விமானப்படையில் வேலை!

இந்திய விமானப்படையில் Flying and Ground Duty பணிக்கு 340 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, 12-ம் வகுப்பில் கணிதம் & இயற்பியல் பாடங்கள் படித்து, ஏதேனும் ஒரு டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 24 வயதிற்குட்பட்ட விருப்பமுள்ள நபர்கள் இங்கு <
News November 16, 2025
கிருஷ்ணகிரி: உறவினருக்கு உருட்டு கட்டையால் அடிஉதை!

கிருஷ்ணகிரி, பர்கூர் அடுத்த ஒப்பதவாடி, காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பண்ணன் (42) அதே பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (65) உறவினர்களான இவர்களுக்குள் இருந்த முன் விரோதம் காரணமாக 9ம் தேதி வீட்டின் அருகே நின்ற கருப்பண்ணனை, அங்கு வந்த நாகராஜ் தரப்பினர் கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். பர்கூர் போலீசார் நாகராஜ், சங்கர், சித்ரா, கவுரம்மாள் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.


