News November 16, 2025
தி.மலை: கடன் பிரச்னையால் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை!

செய்யாறு இளநீர் குன்றம் கிராமத்தை சேர்ந்தவர் கோகுலகிருஷ்னன் (26) தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த பிரசாத் என்பவரிடம் கடன் வாங்கியதாகவும், கடனை திருப்பி செலுத்தாத நிலையில் பிரசாத் இவரை கடத்தி சென்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சலில் இருந்து வந்த கோகுலகிருஷ்ணன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அனக்காவூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News November 16, 2025
தி.மலை: மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை!

திருவண்ணாமலை மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் இயன்முறை மருத்துவர் (BPT) பணிக்கு தற்காலிக நியமன அடிப்படையில் 2 காலியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதற்கு சம்பளமாக ரூ.13,000 வழங்கப்படும். நேர்முகத் தேர்வு மூலம் பணியிடம் நிரப்பப்படும். தகுதியானவர்கள் நவ.24ஆம் தேதிக்குள் மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.
News November 16, 2025
தி.மலை: டிகிரி போதும், விமானப்படையில் வேலை!

இந்திய விமானப்படையில் Flying and Ground Duty பணிக்கு 340 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, 12-ம் வகுப்பில் கணிதம் & இயற்பியல் பாடங்கள் படித்து, ஏதேனும் ஒரு டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 24 வயதிற்குட்பட்ட விருப்பமுள்ள நபர்கள் இங்கு <
News November 16, 2025
தி.மலை: மர்மமான முறையில் இறந்து கிடந்த முதியவர்!

தி.மலை, தூசி அருகே உள்ள தண்டலம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மன்னார்சாமி (89) இவர் தினமும் மாரியம்மன் கோயிலுக்கு சென்று வருவது வழக்கம். இந்த நிலையில், கடந்த 13ஆம் தேதி கோயிலுக்கு சென்றவர் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவர்களை தேடியபோது, காரியமேடைக்கு பின்னால் இருந்த முட்புதரில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தூசி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


