News April 20, 2024

சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக கணக்கெடுக்கும் பணி

image

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக வாக்கு சதவீதத்தை கணக்கெடுக்கும் பணி நடந்து வருவதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறியுள்ளார். தொகுதி வாரியாக வாக்குப் பதிவு சதவீதத்தை தேர்தல் அலுவலர்கள் இறுதி செய்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், 39 தொகுதிகளிலும் அமைதியாக வாக்குப் பதிவு நடந்துள்ளதால் மறு வாக்குப் பதிவு நடைபெறாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Similar News

News November 17, 2025

ரஜினி படத்தை தனுஷ் இயக்குகிறாரா?

image

கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினியின் 173-வது படத்தில் இருந்து சுந்தர் சி தவிர்க்க முடியாத காரணத்தால் வெளியேறிவிட்டார். இதனையடுத்து அந்த படத்தை யார் இயக்கு போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் ரஜினி படத்தை தனுஷ் இயக்கப்போவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அப்படி தனுஷ் இயக்குவது உறுதியானால் எந்த மாதிரி கதையை அவர் எடுப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த காம்போ எப்படி இருக்கும்?

News November 17, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶நவம்பர் 17,கார்த்திகை 1 ▶கிழமை:திங்கள் ▶நல்ல நேரம்: 6.00 AM – 7.30 AM ▶ராகு காலம்: 7.30 AM – 9.00 AM ▶எமகண்டம்: 10.30 AM – 12.00 AM ▶குளிகை: 1.30 PM – 3.00 PM ▶திதி: திரையோதசி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶சந்திராஷ்டமம்: பூரட்டாதி ▶சிறப்பு: ஐயப்ப பக்தர்கள் மாலையணிதல், சிவன் கோயிலில் சங்கு அபிஷேகம், ஸ்ரீ அன்னை நினைவு நாள்.

News November 17, 2025

சத்தீஸ்கரில் 9 நக்சல்கள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை

image

சத்தீஸ்கரின் கோல்மால் பாட் வனப்பகுதியில் நக்சல்கள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அங்கு போலீசாரும், பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியபோது, நக்சல்கள் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டுள்ளனர். இருதரப்பும் மாறி மாறி துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 3 நக்சல்கள் கொல்லப்பட்டனர். கடந்த 3 நாட்களில் மட்டும் 9 நக்சல்கள் என்கவுண்டரில் கொல்லப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!