News November 16, 2025
மதுரையில் இது வரை 78 பேர் பாதிப்பு

வடகிழக்கு பருவமழையால், பொதுமக்களுக்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. இதை அடுத்து மதுரை அரசு தனியார் மருத்துவமனைகளில்ல சிகிச்சை பெற வரும் காய்ச்சல் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மதுரையில் 33 குழந்தைகள் 45 பெரியவர்கள் என மொத்தம் 78 பேர் காய்ச்சல் பாதிப்பில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், இதுதவிர 3 பெண்கள் 1 ஆண் டெங்கு பாதிப்பில் சிகிச்சை பெறுகின்றனர்.
Similar News
News November 16, 2025
மதுரையில் வாலிபருக்கு ஓட ஓட அரிவாள் வெட்டு

மதுரை பேரையூர் அருகே மங்கள்ரேவு தெற்கு தெருவில் இறந்தவர் உடலை அடக்கம் செய்வதற்காக நேற்று மயானத்திற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது உறவினர்களுக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டது, துக்க வீட்டைச் சேர்ந்த 6 பேர் சேர்ந்து அதை ஊரைச் சேர்ந்த தங்கமுத்து 35 என்பவரை அரிவானால் வெட்டினர், கையில் வெட்டு காயம்பட்ட அவர் பேரையூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
News November 16, 2025
மதுரை: சிறுமி கர்ப்பம்; வாலிபர் மீது போக்சோ

விளாச்சேரியை சேர்ந்த ரஞ்சித்குமார்(27) மதுரை கொசவபட்டியில் உள்ள குலதெய்வம் கோயிலில், 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டார். இதனால் சிறுமி 5 மாத கர்ப்பமானார். இதை அறிந்த மகளிர் ஊர் நல அலுவலர் பத்மா இது குறித்து திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் ரஞ்சித்குமார் மீது போக்சோ சட்டத்தில் இன்று வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
News November 16, 2025
மதுரை: 1,429 காலியிடங்கள்.. ரூ.71,900 வரை சம்பளம்

மதுரை மக்களே, தமிழ்நாடு சுகாதாரத்துறையில் (TN MRB) காலியாக உள்ள Health Inspector Grade-II பணிகளுக்கு 1429 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளியில் தமிழை ஒரு படமாக பயின்று தகுதியான படிப்பை முடித்தவர்கள் நவ. 16 (இன்று)-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். சம்பளம் – ரூ.19,500 – ரூ.71,900. மேலும் விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க இங்கு <


