News April 20, 2024

உடைமைகளை மறந்து செல்லும் வாடிக்கையாளர்கள்

image

ஊபர் டாக்ஸியில் உடைமைகளை மறந்து விட்டுச் சென்ற வாடிக்கையாளர்கள் குறித்து அந்நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, டெல்லி வாடிக்கையாளர்கள் அதிக உடைமைகளை மறந்து சென்று 2ஆவது ஆண்டாக முதல் இடம் பிடித்துள்ளனர். மும்பை 2ஆவது இடத்தையும், பெங்களூரு 3ஆவது இடத்தையும் பிடித்துள்ளன. அதிகபட்சமாக போன்கள், பணப்பைகள், மேலாடைகள், சாவிகள், கண்ணாடிகள், நகைகள் போன்றவற்றை மறந்து விட்டு சென்றுள்ளனர்.

Similar News

News August 18, 2025

பள்ளி மாணவர்கள் நெரிசல் இல்லாமல் பஸ்ஸில் போகலாம்!

image

மாணவர்கள் அரசு பஸ்களில் நெரிசலின்றி பள்ளிக்கு செல்லும் திட்டத்தை சென்னையில் DCM உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதல்கட்டமாக, 25 பள்ளிகளில் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, காலையில் பள்ளி மாணவர்களை மட்டும் ஏற்றிவிட்டு பள்ளி வளாகத்திற்குச் செல்லும் மாநகர பஸ்கள், மாலையில் அதே வழித்தடத்தில் சென்று அவர்கள் பகுதியில் இறக்கிவிடும். தமிழ்நாடு முழுவதும் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வருமா?

News August 18, 2025

நான் இறந்துவிட்டேன்.. கல்லூரி மாணவர் விபரீத முடிவு

image

‘நீங்கள் இதை படிக்கிறீர்கள் என்றால், நான் இறந்துவிட்டேன் என அர்த்தம். எனது மரணம் என் சொந்த முடிவு. ஓராண்டாக திட்டமிட்டு இந்த முடிவை எடுத்துள்ளேன்.’ நொய்டாவில் தற்கொலை செய்த மாணவர் சிவம் டே(24) எழுதிய வரிகள் இவை. மாணவன் 2 ஆண்டுகளாக கல்லூரிக்கு வரவில்லை எனவும், அதனை கல்லூரி நிர்வாகம் தங்களுக்கு தெரிவிக்கவில்லை என்றும் அவரது பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதுகுறித்து போலீஸ் விசாரித்து வருகிறது.

News August 18, 2025

துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியா? திருச்சி சிவா பதில்

image

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு எதிராக திமுகவின் திருச்சி சிவாவை களமிறக்க ‘INDIA’ கூட்டணி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், தற்போது வரை யாரும் பரிசீலனையில் இல்லை என INDIA கூட்டணி தரப்பு கூறியது. டெல்லியில், வேட்பாளர் தேர்வுக்கான ஆலோசனை கூட்டத்தையும் INDIA கூட்டணி கூட்டியுள்ளது. இதனிடையே, வேட்பாளர் தேர்வு குறித்து தனக்கு எதுவும் தெரியாது என திருச்சி சிவா விளக்கம் அளித்துள்ளார்.

error: Content is protected !!