News November 15, 2025
திருவாரூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலெர்ட்!

வங்கக் கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள காரணத்தால், தமிழத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் நாளை (நவ.16) திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களின் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யக்கூடும் என ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!
Similar News
News November 16, 2025
திருவாரூர் இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (நவ.15) இரவு 10 மணி முதல் நாளை (நவ.16) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ள மக்கள் இதில் தங்களது புகாரை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
News November 16, 2025
திருவாரூர். மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகள்

திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பாரத் கல்லூரியில் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் ஆட்சியர் மோகனசந்திரன்,சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், ஆதிதிராவிடர் வீட்டு வசதி வாரியம் தலைவர் இளையராஜா, பார்வையிட்டு மாற்று திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
News November 16, 2025
நன்னிலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஆய்வு

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று (நவ.15) வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகளை ஆட்சியர் வ.மோகனசுந்தரம் நேரில் பார்வையிட்டார். பார்வையின் போது மாவட்ட தேர்தல் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.


