News April 20, 2024

நாளை முதல் 5 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி

image

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே சாப்டூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில். இக்கோவிலில் நாளை (ஏப். 21) முதல் 24ஆம் தேதி வரை 4 நாட்கள் சித்திரை மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு தரிசனம் செய்ய பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் மற்றும் வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.

Similar News

News November 25, 2025

மதுரை: மீன் பிடிக்க சென்ற முதியவர் பரிதாப பலி

image

மதுரை சிலையனேரி மந்தையம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த மாசானம் மகன் முத்து இருள்(60). இவா், அதே பகுதியில் உள்ள கண்மாயில் மீன் பிடிப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை சென்றாா். அப்போது, எதிா்பாராதவிதமாக கண்மாய் நீரில் மூழ்கினாா். அவரை மீட்ட அக்கம் பக்கத்தினா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து கூடல்புதூர் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

News November 25, 2025

மதுரை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

மதுரை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 25, 2025

மதுரை: ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த இளைஞர்

image

திரு­மங்­கலம் அருகே கீழக்­கோட்டையை சேர்ந்த அமாவாசை மகன்
ஜெயபாண்டி(33). இவர் காலை வழக்­கம் போல்
வேலைக்கு செல்­வதாக வீட்­டில் கூறி­யவர் திரு­மங்­கலம் ரயில் நிலை­யம் சென்று, நாகர்­கோ­வி­லி­ருந்து மும்பை செல்­லும் எக்ஸ்­பி­ரஸ் ரயில் முன் பாய்ந்து தற்­கொலை செய்து கொண்­டார். ரயில்வே போலீ­சாரின் முதற்கட்ட விசாரணையில் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.

error: Content is protected !!