News November 15, 2025

கரூரில் உயிரிழந்தவர்களின் வீடுகளில் CBI

image

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக CBI தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. நேற்று (நவ.14) கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்கள் 7 பேரிடம் CBI அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து இன்று, கரூர் துயர சம்பவத்தில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரின் வீடுகளுக்கு CBI அதிகாரிகள் 3 குழுவாக பிரிந்து சென்று விசாரித்து வருகின்றனர்.

Similar News

News November 15, 2025

நெட்டிசன்களின் கேலிக்கு உள்ளான தவெக

image

EC கூட்டங்களில் தவெகவிற்கு அழைப்பு விடுக்க கோரி விஜய் கடிதம் எழுதியிருந்தார். இதில் மாநில தேர்தல் ஆணையர் மற்றும் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோருக்கு கோயம்பேட்டில் உள்ள மாநில EC முகவரிக்கு தவெகவினர் அனுப்பியுள்ளனர். ஆனால் தமிழகத்திற்கான தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கின் அலுவலகம் தலைமை செயலகத்தில் உள்ளது. இந்த தவறை சுட்டிக்காட்டி தவெகவை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

News November 15, 2025

விஜய் + அதிமுக + பாஜக கூட்டணி… முடிவை அறிவித்தார்

image

திமுக, பாஜக கட்சியை தவிர பிற கட்சிகளுடன் கூட்டணிக்கு ரெடி என தவெக முக்கியத் தலைவரான அருண்ராஜ் தெரிவித்துள்ளார். ஆனால், தே.ஜ.கூட்டணியில் விஜய்யை இணைக்க திட்டமிட்டு இபிஎஸ் காய் நகர்த்தி வருகிறார். தவெகவை மனதில் வைத்தே ஜனவரியில் மெகா கூட்டணி அமையும் என அவர் அறிவித்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். திமுகவை எதிர்க்கும் கட்சிகள் ஓரணியில் திரள விஜய் பச்சைக்கொடி காட்டுவாரா?

News November 15, 2025

உங்கள் குழந்தையின் தன்னம்பிக்கை வளர..

image

➤தோல்விகளை கையாள்வது எப்படி என்பதை கற்றுக்கொடுங்கள் ➤அவர்கள் எதை நினைத்து பயப்படுகிறார்கள் என கேட்டு, உதவுங்கள் ➤சோகமாக இருப்பதை Normalise செய்யுங்கள். அதிலிருந்து மீண்டு வருவது எப்படி என்பதை கற்றுக்கொடுங்கள் ➤அவர்கள் செய்யும் சின்ன சின்ன விஷயங்களையும் பாராட்டுங்கள் ➤மற்ற குழந்தைகளோடு உங்கள் பிள்ளையை ஒப்பிட்டு பேச வேண்டாம். அனைத்து பெற்றோர்களுக்கும் SHARE THIS.

error: Content is protected !!