News November 15, 2025
ஈரோடு: கேஸ் மானியம் ரூ.300 பெறுவது எப்படி?

கேஸ் மானியம் ₹300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க
Similar News
News November 15, 2025
ஈரோடு மாவட்ட காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

ஈரோடு மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காலத்தில் தங்கள் உட்கோட்ட அதிகாரிகளை கீழ்காணும் கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். அல்லது 100-ஐ டயல் செய்யலாம். ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வெளியிடப்பட்டுள்ளது.
News November 15, 2025
ஈரோடு மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

ஈரோடு மாவட்டத்தில் லாரிகள் அதிகளவில் பாரங்களை ஏற்றி செல்வதால் விபத்துகள் ஏற்படுகின்றன. அனுமதிக்கப்பட்ட அளவை மீறி பாரங்கள் ஏற்றுவது வாகனங்களுக்கு சேதம் மற்றும் உயிரிழப்பு ஏற்படும் நிலையை உருவாக்குகிறது. எனவே எடை விதிகளை கடைபிடிக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட போலீசார் வாகன ஓட்டுநர்களை அறிவுறுத்தியுள்ளனர்.
News November 15, 2025
ஈரோடு: ஊர்க்காவல் படையில் சேர வாய்ப்பு!

ஈரோடு மாவட்ட காவல்துறைக்கு உதவியாக பணியாற்றும் ஊர்க்காவல் வீரர்களுக்கான பணியிடம் காலியாக உள்ளது. காலியாக உள்ள ஊர்க்காவல் படை வீரர்களுக்கான விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. 14.11.25 முதல் 20.11.25 வரை காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை விண்ணப்ப படிவங்கள் வழங்கப்படும். நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட ஊர்க்காவல் படை அலுவலகத்தில் 21.11.2025 மதியம் 2 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!


