News April 20, 2024

அப்பாவி கொள்ளையனுடன் உரையாடிய நபர்

image

பெங்களூருவைச் சேர்ந்த அருண் என்பவர், வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்ட சைபர் கொள்ளையனுடன் Chat செய்துள்ளார். ஆண்ட்ராய்டு செயலிகள் மூலம் பணமோசடி செய்யும் அந்த கொள்ளையன், எப்படியெல்லாம் மோசடி செய்கிறார் என்ற நுட்பத்தை அப்பாவித் தனமாக விவரித்துள்ளார். இறுதியில் அருணின் திட்டத்தை உணர்ந்து கொண்ட கொள்ளையன் காவல்துறையை அணுக வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார். இந்த வாட்ஸ்அப் Chat இணையத்தில் வைரலாகி வருகிறது.

Similar News

News August 18, 2025

நான் இறந்துவிட்டேன்.. கல்லூரி மாணவர் விபரீத முடிவு

image

‘நீங்கள் இதை படிக்கிறீர்கள் என்றால், நான் இறந்துவிட்டேன் என அர்த்தம். எனது மரணம் என் சொந்த முடிவு. ஓராண்டாக திட்டமிட்டு இந்த முடிவை எடுத்துள்ளேன்.’ நொய்டாவில் தற்கொலை செய்த மாணவர் சிவம் டே(24) எழுதிய வரிகள் இவை. மாணவன் 2 ஆண்டுகளாக கல்லூரிக்கு வரவில்லை எனவும், அதனை கல்லூரி நிர்வாகம் தங்களுக்கு தெரிவிக்கவில்லை என்றும் அவரது பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதுகுறித்து போலீஸ் விசாரித்து வருகிறது.

News August 18, 2025

துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியா? திருச்சி சிவா பதில்

image

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு எதிராக திமுகவின் திருச்சி சிவாவை களமிறக்க ‘INDIA’ கூட்டணி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், தற்போது வரை யாரும் பரிசீலனையில் இல்லை என INDIA கூட்டணி தரப்பு கூறியது. டெல்லியில், வேட்பாளர் தேர்வுக்கான ஆலோசனை கூட்டத்தையும் INDIA கூட்டணி கூட்டியுள்ளது. இதனிடையே, வேட்பாளர் தேர்வு குறித்து தனக்கு எதுவும் தெரியாது என திருச்சி சிவா விளக்கம் அளித்துள்ளார்.

News August 18, 2025

நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. மழை கொட்டும்: IMD

image

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நாளை தாழ்வு மண்டலமாக வலுவடைந்து பின்னர் கரையை கடக்க உள்ளது. இந்நிலையில், இன்றிரவு 10 மணி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, கோவை, தேனி, தென்காசி ஆகிய 13 மாவட்டங்களில் மழை பெய்யும் என IMD கணித்துள்ளது. மேலும், ஆக.24 வரை மழை நீடிக்குமாம். கவனமா இருங்க நண்பர்களே!

error: Content is protected !!