News November 15, 2025
அபுதாபி செல்லும் அரியலூர் வீராங்கனை!

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அடுத்த காட்டாத்தூர் பகுதியைச் சேர்ந்த கிக் பாக்ஸிங் வீராங்கனை எழில் பாத்திமா கடந்த ஜூலை 25 நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்றார். இந்நிலையில், ஐக்கிய அமீரகம் அபுதாபியில் நவ.20 முதல் நடைபெறும் உலக சீனியர்ஸ் கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க செல்கிறார். இப்போட்டியில் தமிழகத்தில் இருந்து 11 பேர் கலந்து கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 15, 2025
அரியலூர் மாற்றுத்திறனாளிகளுக்கு ஓவியப்போட்டி

அரியலூர் மாவட்டத்தில் டிசம்பர் 03, உலக மாற்றுதிறனாளிகள் தினத்தை முன்னிட்டு, ஓவியப் போட்டிகள் மாற்றுத்திறன் அடிப்படையில் 4 பிரிவுகளாக நடத்தப்பட உள்ளது. இப்போட்டிகள் வரும் 21ம் தேதி அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும், என அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
News November 15, 2025
செந்துறை ரேஷன் கடையில் திருமாவளவன் பெயர் நீக்கம்

அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியம் நிண்ணியூர் கிராமத்தில் சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து கட்டப்பட்ட நியாய விலை கடையின் முகப்பு மற்றும் கல்வெட்டில் எழுதப்பட்டிருந்த திருமாவளவன் பெயரை இரவு நேரத்தில் சமூக விரோதிகளால் அளிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இகுறித்து செந்துறை காவல் ஆய்வாளர் குணசேகரன் வழக்கு பதிந்து சம்பவ இடத்தில் தீவிர விசாரணை நடத்திவருகிறார்.
News November 15, 2025
அரியலூர்: லாரியில் மோதி வாலிபர் பரிதாப பலி

அரியலூர் மாவட்டம் பொய்பூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் அரியலூர் அருகே தங்க நகரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது, லாரியில் மோதியதில் சம்பவ இடத்துலையே பலியார். இது குறித்து குன்னம் போலீசார் வழக்கு பதிவு, செய்து பிரேதத்தை கைப்பற்றி, அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


